ராஜா ராணி – 2 -ல் இருந்து விலகும் முக்கிய கேரக்டர் – வெளியான புதிய ப்ரோமோ… ரசிகர்கள் வாழ்த்து!
விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி – 2 சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த பிரபலம் விலகவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.
வைஷ்ணவி:
விஜய் டிவியில் குடும்பத்தையும் ஒரு பெண்ணின் இலக்கையும் கதை களமாக கொண்டு ஒளிபரப்பாகும் ராஜா ராணி – 2 சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர்கள் தொடர்ந்து மாற்றப்பட்டு வருகின்றனர். முதலில் ஆலியா மானசா சந்தியா கேரக்டரில் நடித்து வந்தார். இவருக்கும் இந்த சீரியலின் கதைக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.
EPF சந்தாரர்களுக்கு நிறுவனங்கள் பங்களிப்பு செய்யவில்லையெனில் அபராதம் – எவ்வளவு தெரியுமா?
இந்த நிலையில் ஆலியா மானசா கர்ப்பமான காரணத்தினால் சீரியல்களில் இருந்து விலகிக்கொண்டார் இவருக்கு பதிலாக சந்தியா கேரக்டரில் ரியா நடித்த வந்தார். பிறகு ரியா விலகியதை அடுத்து அவருக்கு பதிலாக தற்போது ஜீ தமிழில் கோகுலத்தில் சீதை சீரியலில் நடித்து வந்த ஆஷா கௌடா சந்தியாவாக நடித்து வருகிறார்.
Follow our Instagram for more Latest Updates
இந்த நிலையில் பார்வதி கேரக்டரில் நடித்து வரும் வைஷ்ணவியும் விலக இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. இந்த நேரத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்ப படவுள்ள பொன்னி சீரியல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் ராஜா ராணி சீரியலில் பார்வதியாக நடித்து வந்த வைஷ்ணவி கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த பொன்னி சீரியலுக்காக தான் வைஷ்ணவி ராஜா ராணி சீரியலில் இருந்து விலகினாரா? என்று கேள்வி எழுந்து வருகிறது. மேலும் புதிய சீரியலில் நடித்து வரும் வைஷ்ணவிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Exams Daily Mobile App Download