விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – ஊர் மக்களை காப்பாற்றிய சந்தியா!
பார்வதி மற்றும் சக்கரையின் உடம்பில் கட்டப்பட்டிருந்த வெடி குண்டை கண்டுபிடித்து சரியான நேரத்தில் கழட்டி ஊர்மக்களின் உயிரை சந்தியா காப்பாற்றினார். இதனால் போலீசார் சந்தியா மற்றும் சரவணனை பாராட்டுவது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது.
ராஜா ராணி சீசன் 2:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ராஜா ராணி சீசன் 2 தொடரில் பார்வதி மற்றும் சர்க்கரை இருவரையும் பெரிய ஆபத்தில் இருந்து காப்பாற்றி ஊர் மக்களின் பாராட்டை சந்தியா பெற்றார். அதாவது, பார்வதியை ஒரு தீவிரவாதி கும்பல் கடத்தி வைத்திருந்த போது சந்தியா தான் பார்வதியை காப்பாற்றினார். இதுமட்டுமல்லாமல் சக்கரையின் உடம்பில் மாட்டப்பட்டிருந்த அனைத்து குண்டையும் எடுத்து ஊர் மக்கள் அனைவரையுமே காப்பாற்றினார். மிகப் பெரிய ஆபத்தில் இருந்து ஊர் மக்களை காப்பாற்றியதால் போலீசார் சந்தியாவை பாராட்டுகின்றனர்.
போலீஸ் தொப்பியை கழட்டி சந்தியாவிற்கு மாட்டிவிட்டு நீங்கள் இருக்க வேண்டிய இடம் இது கிடையாது. கண்டிப்பாக நீங்கள் மிகப் பெரிய போலீஸ் அதிகாரியாக வந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என கூறுகிறார். உடனே சிவகாமி ஓடி வந்து தொப்பியை கழட்டி போலீசாரின் கையில் கொடுத்து இவள் எங்கள் வீட்டிற்கு நல்ல மருமகளாக இருந்தால் மட்டும் போதும். தேவையில்லாமல் அவளுக்கு ஆசை காட்டவேண்டாம் என சொல்லிவிட்டு சிவகாமி கிளம்பிவிடுகிறார். பின்னர் பார்வதியை பார்க்க சரவணன் சந்தியா அனைவரும் செல்கின்றனர்.
Exams Daily Mobile App Download
பார்வதிக்கு எந்த பிரச்சனையும் கிடையாது என மருத்துவர்கள் கூறிவிடுகின்றனர். பாஸ்கரின் அம்மாவும் மருத்துவமனைக்கு ஓடி வந்து வீட்டில் இவ்வளவு விஷயம் நடந்திருக்கிறது எதற்காக எதுவுமே எங்களிடம் கூறவில்லை என கேட்கிறார். எதற்கு தேவையில்லாமல் மன கஷ்டம் என்று தான் எதுவும் சொல்லவில்லை என பாஸ்கரின் அம்மாவிடம் சந்தியாவும் சரவணனும் மன்னிப்பு கேட்கின்றனர். பின்பு, நீண்ட நாட்களுக்கு பிறகு பார்வதியும் பாஸ்கரும் சிரித்து ஒற்றுமையாக அமர்ந்து பேசும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.