பார்வதியை கடத்தியது யார் என்பதை கண்டுபிடித்த சந்தியா – புதிய திருப்பங்களுடன் ராஜா ராணி சீசன் 2!

0
பார்வதியை கடத்தியது யார் என்பதை கண்டுபிடித்த சந்தியா - புதிய திருப்பங்களுடன் ராஜா ராணி சீசன் 2!
பார்வதியை கடத்தியது யார் என்பதை கண்டுபிடித்த சந்தியா - புதிய திருப்பங்களுடன் ராஜா ராணி சீசன் 2!
பார்வதியை கடத்தியது யார் என்பதை கண்டுபிடித்த சந்தியா – புதிய திருப்பங்களுடன் ராஜா ராணி சீசன் 2!

பார்வதியை யார் கடத்தியது என சந்தியா பல நாட்களாக தீவிர முயற்சியில் இறங்கி தேடி கொண்டிருந்தார். தற்போது செல்வத்தை சந்தியா கையும் களவுமாக பிடிக்கும் படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

ராஜா ராணி 2:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ராஜா ராணி சீசன் 2 தொடரில் பார்வதியை கடத்தி சென்றது யார் என்பதை சந்தியா கண்டுபிடிப்பாரா இல்லையா என சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அதாவது ஆரம்பத்தில் பார்வதிக்கும் பாஸ்கருக்கும் திருமணம் நடைபெறுமா என சீரியல் குழப்பத்தில் சென்று கொண்டிருந்தது. விக்கி எவ்வளவு தான் பார்வதியின் திருமணத்தை நிறுத்த பிளான் போட்டாலும் கடைசியில் சந்தியா பிளான் போட்டு இருவருக்கும் திருமணத்தை நடத்தி வைத்து விட்டார். திருமணம் ஆனதுமே பார்வதியை ஒரு மர்ம கும்பல் கடத்தி சென்று விட்டது.

பாக்கியா மீது கோவப்படும் கோபி, பழையபடி பேச முயற்சி செய்யும் தாத்தா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

பார்வதியை கடத்தி சென்றது யார் என்பதை கண்டுபிடிக்க சந்தியா தீவிர முயற்சியில் இறங்கியுள்ளார். பார்வதியை கடத்தியதில் முக்கிய குற்றவாளியாக சரவணன் கடையில் வேலை பார்த்து வரும் செல்வம் தான் இருக்கிறார். பார்வதியை கடத்தியதில் இருந்து அனைத்து ஆதாரங்களையும் தீவிரவாதிகள் பென் டிரைவில் சேவ் செய்து வைத்திருந்தனர். அந்த பென் டிரைவ் எப்படியோ சந்தியாவின் கையில் கிடைத்துவிட்டது. இதற்கு நடுவே பார்வதியை பார்க்க பாஸ்கரின் குடும்பத்தினர்கள் வந்திருக்கிறார்கள். பாஸ்கரும் பார்வதியும் வெளியே சென்றிருக்கிறார்கள் என மழுப்பி குடும்பத்தினரை எப்படியோ சந்தியா அனுப்பிவிட்டார்.

Exams Daily Mobile App Download

இதன் பின்பு, பார்வதியை மருத்துவமனையில் சேர்த்துள்ளதாக போலீசார் கூறுகின்றனர். இதன் பின்பு பார்வதி கண் முழித்துவிட்டால் கண்டிப்பாக நாம் ஜெயிலுக்கு தான் போக வேண்டும் என நினைத்து பார்வதியை கொலை செய்தே தீர வேண்டும் என செல்வம் முடிவெடுக்கிறார். பார்வதியை சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட மருத்துவமனைக்கு செல்வம் செல்கிறார். செல்வம் அங்கு சென்றதுமே போலீசார் செல்வத்தை சுற்றி வளைத்து கைது செய்யும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!