விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ சீரியலில் வரப்போகும் ட்விஸ்ட் – சந்தியாவிற்கு எழுந்த சந்தேகம்!

0
விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ சீரியலில் வரப்போகும் ட்விஸ்ட் – சந்தியாவிற்கு எழுந்த சந்தேகம்!
விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ சீரியலில் வரப்போகும் ட்விஸ்ட் – சந்தியாவிற்கு எழுந்த சந்தேகம்!
விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ சீரியலில் வரப்போகும் ட்விஸ்ட் – சந்தியாவிற்கு எழுந்த சந்தேகம்!

விஜய் டிவியில் முன்னிலை சீரியலாக வளர்ந்து வரும் ராஜா ராணி சீசன் 2 சீரியலுக்கு ரசிகர்கள் நல்ல ஆதரவை தெரிவித்து வருகிறார்கள். தற்போது பார்வதியை காப்பாற்றும், நோக்கில் கதை நகர்ந்து வருகிறது. இந்நிலையில் சந்தியாவிற்கு செல்வம் மீது அதிக சந்தேகம் எழுந்து உள்ளது. இனி தரமான சம்பவங்கள் ராஜா ராணி 2 சீரியலில் உள்ளது என இணையத்தில் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

ட்விஸ்ட் எபிசோட்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீசன் 2 சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சீரியலின் கதைப்படி, பாஸ்கரை நினைத்தபடியே திருமணம் செய்த பார்வதி மறு வீட்டிற்கு வரும்பொழுது அவரை யாரோ கடத்தி விட்டார். இதை சிறிது நேரம் கழித்து பார்த்த வீட்டில் உள்ள அனைவரும் பதறிப்போய் தேடி பார்த்தார்கள், ஆனால் எங்கும் தேடியும் கிடைக்கவில்லை. இதை தொடர்ந்து விக்கியின் அப்பா தான் கடத்தி இருக்க வேண்டுமென்று சந்தியாவிற்கு சந்தேகம் ஏற்பட்டது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கடைக்குட்டி கண்ணன் வீட்டில் திருமண விசேஷம் – ரசிகர்கள் வாழ்த்து!

இருப்பினும் சரவணன் கடையில் வேலை செய்து வந்த செல்வம் ஒரு தீவிரவாதி என்ற உண்மை பார்வதிக்கு தெரிந்த காரணத்தால் தான் பார்வதி செல்வத்தால் கடத்தப்பட்டால், இதுதான் உண்மை. மேலும் பார்வதியை மனித வெடிகுண்டாக மாற்ற முயற்சி செய்து வருகிறார் செல்வம். உன் குடும்பத்தை கொன்று விடுவேன் என்று பார்வதியை மிரட்டி மனித வெடிகுண்டாக மாற சம்மதிக்க வைக்கிறார். மேலும் சந்தியாவுக்கு ஏற்கெனவே செல்வம் மீது சந்தேகம் வந்து விட்டது. இப்போது சந்தியா எப்படி பார்வதியை எப்படி காப்பாற்ற போகிறார் என்ற நிலையில், தற்போது அவர் கைக்கு ஒரு பென்டிரைவ் கிடைத்துள்ளது. அந்த பென்டிரைவை சந்தியா போலீஸ் அதிகாரியிடம் கொடுத்து விட்டார். அதை செக் செய்து பார்த்தால், அதில் ஒரு கோவிலின் புகைப்படமும் பார்வதியின் புகைப்படமும் இருந்தது. பின்னர் போலீஸ் சந்தியாவிடம் கூறியது, அந்த கோவிலில் வெடிகுண்டு வைக்க போறாங்க, எங்களுக்கு தகவல் வந்திருக்கு.

Exams Daily Mobile App Download

இந்த குண்டு வைப்புக்கும் பார்வதிக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கு என அவர் கூறினார். இதை கேட்டு அதிர்ச்சியில் சந்தியா சரவணன் கடைக்கு வருகிறார். அப்போது அந்த கடையில் வேலை பார்க்கும் சக்கரை என்ற பையனுக்கு, செல்வம் விலை உயர்ந்த கோர்ட் வாங்கி கொடுத்துள்ளார். அதை சக்கரை போட்டு கொண்டு சந்தியாவிடம் காட்ட, யார் வாங்கி கொடுத்த என்று கேட்டார் சந்தியா. அதற்கு பதில் அளித்த சக்கரை செல்வன் அண்ணன் தான் வாங்கி கொடுத்தாங்க என்றான். இதை கேட்ட சந்தியா குழப்பத்தில் இருந்தார், சுவீட் கடையில் வேலை பார்க்கும் இவனுக்கு எப்படி இவளோ பணம் என்று யோசித்தார். மேலும் செல்வம் மீது சந்தியாவிற்கு சந்தேகம் கூடியுள்ளது. இதையடுத்து சந்தியா உண்மையை கண்டு பிடிப்பாரா? இல்லை பார்வதி மனித வெடிகுண்டு உடன் கோவிலுக்கு செல்லப்போகிறாரா, அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து வருகிறார்கள்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!