விக்கியின் கொடுமையால் தற்கொலை செய்ய முடிவெடுக்கும் பார்வதி – சந்தியா காப்பாற்றுவாரா? ப்ரோமோ ரிலீஸ்!
காதலித்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை குடும்பத்திலுள்ள அனைவரிடமும் காட்டி விடுவேன் என அவ்வப்போது பார்வதியை விக்கி மிரட்டிக் கொண்டே இருப்பதால் பார்வதி தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயற்சி செய்வது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது.
ராஜா ராணி:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ராஜாராணி சீசன் 2 தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. பார்வதிக்கு திருமணம் நடைபெறுமா அல்லது கடைசி நேரத்தில் விக்கி ஏதேனும் குழப்பம் செய்து திருமணத்தை நிறுத்த போகிறாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். அதாவது விக்கி நல்லவன் என்று நினைத்து விக்கியின் மீது பார்வதி காதலில் விழுகிறார். காதலித்த பிறகுதான் விக்கியை பற்றிய முழு விவரங்களையும் பார்வதி அறிந்து கொள்கிறார்.
அர்ஷ் பிறந்த பிறகு முதல் ரம்ஜானை கொண்டாட போகும் ஆலியா – வைரலாகும் வீடியோ!
இதற்கு மேலாவது விக்கியை விட்டு விலகியே தீர வேண்டும் என நினைத்து வீட்டில் பார்க்கும் பாஸ்கரை திருமணம் செய்து கொள்ள ஒப்புக் கொள்கிறார். ஆனாலும்,விக்கிக்கு பார்வதி பாஸ்கரை திருமணம் செய்து கொள்வதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எப்படியாவது இந்த திருமணத்தை நிறுத்தியே தீரவேண்டும் என நினைத்து பாஸ்கரிடம் சென்று பார்வதியும் விக்கியும் காதலித்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை காட்டுகிறார்.
Exams Daily Mobile App Download
ஆனாலும் எனக்கு இந்த விஷயம் ஏற்கனவே தெரியும் என பாஸ்கர் கூறுகிறார். திருமணம் நாளை நடக்க இருக்கும் நிலையிலும்கூட விக்கி பார்வதியை விடுவதாக இல்லை. நான் சொல்வதை நீ கேட்கவேண்டும் இல்லை என்றால் உன் குடும்பத்தையே அசிங்கப்படுத்தி விடுவேன். நாமிருவரும் காதலித்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அனைவரிடமும் காட்டி விடுவேன் எனக் கூறி மிரட்டுகிறார். வீட்டில் உள்ள அனைவரையும் அசிங்கப்படுத்துவதற்கு நாம் தற்கொலை செய்து கொள்ளலாம் என நினைத்து தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயற்சி செய்வது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது.