சந்தியாவுக்காக அம்மாவை எதிர்க்கும் சரவணன் – ‘ராஜா ராணி 2’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!
எதிர்பார்க்காத பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் ராஜா ராணி 2 சீரியலில் தற்போது காத்திருக்கும் டுவிஸ்ட்கள் ரசிகர்களை மேலும் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியுள்ளது. அவ்விதமாக அடுத்து என்ன நடக்க காத்திருக்கிறது என்பதை குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.
ராஜா ராணி 2:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் டாப் சீரியல்களில் ஒன்றுதான் ராஜா ராணி 2. இந்த சீரியலுக்கான முதல் பாகம் ராஜா ராணி 1 அமோக வெற்றி பெற்றதை அடுத்து தற்போது இரண்டாவது சீசனும் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் கொடுத்து வருகிறது. இவ்வாறு நல்ல கதைக்களத்துடன் தொடங்கிய இந்த சீரியல் ஆரம்ப நாள் முதல் ரசிகர்கள் மனதை அதிகளவு கவர்ந்து டிஆர்பி ரேடிங்கில் முன்னணி வகித்து வருகிறது.
அப்பேற்பட்ட சீரியலில் கடந்த எபிசோடுகளில் குண்டுவெடிப்பை சந்தியா தடுத்து நிறுத்தினார். அதனால் சந்தியாவிற்கு போலீசார்கள் பாராட்டு விழா நடத்த வேண்டும் என நினைத்து வீடு தேடிவந்து அழைத்தனர். ஆனால் மாமியார் சிவகாமி எப்போதும் போல அது எல்லாம் ஒன்றும் வேண்டாம் அவ எனக்கு நல்ல மருமகளா, என் மகனுக்கு நல்ல மனைவியா மட்டும் இருந்தால் போதும் எனக் கூறி சொல்லி மறுக்கிறார்.
ஆனால் சந்தியாவின் போலீஸ் கனவை நிறைவேற்ற நினைக்கும் கணவர் சரவணன் இந்த பாராட்டு விழாவில் தனது மனைவி சந்தியா கலந்து கொண்டால் அவள் கனவு நிச்சயம் ஒரு நாள் நிறைவேறும் என்ற நினைப்பில் ஆதரவு தெரிவிக்கிறார். அப்போது மீண்டும் சிவகாமி மறுப்பு தெரிவிக்கும் விதமாக என் குடும்பத்துக்கு எந்த பதவியும் வேண்டாம் அவ எங்கயும் போகக்கூடாது என சொல்கிறார்.
Exams Daily Mobile App Download
ஆனால் இந்த முறை இந்த வாய்ப்பை தவற விட்டால் அடுத்து சந்தியாவுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் போய்விடும் என நினைத்து அம்மாவை எதிர்த்து பேசுகிறார். சந்தியா கண்டிப்பா இந்த விழாவில் கலந்து கொள்வார் என சொல்ல சிவகாமி கோபத்தில் சரவணனை பார்க்கிறார். இவ்வாறு இதை வைத்து பார்க்கையில் கூடிய விரைவில் சிவகாமி மற்றும் சரவணனுக்கிடையே பிரச்சனை ஒன்று காத்திருப்பது மட்டும் நன்றாகத் தெரிய வருகிறது.