வெடித்து சிதறிய பாம், சரவணனின் கதி என்ன? ‘ராஜா ராணி 2’ சீரியலில் அடுத்த ட்விஸ்டு!
விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ சீரியலின் அடுத்தகட்ட கதைக்களத்தில் சர்க்கரையின் கோட்டில் மாட்டப்பட்டிருக்கும் அணுகுண்டை சந்தியா கண்டுபிடிக்க, சரவணன் அதை தூக்கிக் கொண்டு போவது போல பரபரப்பான ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.
ராஜா ராணி 2
தற்போது விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ சீரியலில் எதிர்பாராத சில திருப்பங்கள் அரங்கேற இருக்கிறது. அதாவது, பார்வதியை கடத்தி வைத்திருந்த தீவிரவாதியை கண்டுபிடித்து போலீசில் ஒப்படைத்த பிறகு சரவணன் குடும்பத்தார் அனைவரும் நிம்மதியாக சாமி கும்பிடுகின்றனர். அப்போது, சர்க்கரை அங்கு இல்லை என்றதும் செல்வம் சொன்னது சந்தியாவுக்கு ஞாபகம் வருகிறது. அதாவது ஸ்வீட்டில் தான் உனக்கு ஆப்பு இருக்கிறது என்று செல்வம் கூறியதை வைத்து சந்தியா அவரை தேடி ஓடுகிறார்.
பிறகு, சர்க்கரையை கண்டுபிடிக்கும் சந்தியா, செல்வம் ஏதாவது சொன்னானா என்று கேட்கிறார். அப்போது இந்த கோட்டை கழட்ட கூடாது என்று செல்வம் சொன்னதாக சர்க்கரை கூறுகிறார். உடனே அவரை அழைத்து கொண்டு ஓடும் சந்தியா சட்டையில் பாம் இருக்கிறதா என்று செக் செய்கிறார். அப்போது கோட்டில் வைக்கப்பட்டிருக்கும் பாமை கண்டு பிடிக்கும் சந்தியா என்ன செய்வது என்று தெரியாமல் நிற்க சரவணன் அந்த பாமை எடுத்துக்கொண்டு யாரும் உடன் வர வேண்டாம் என சொல்லி விட்டு ஓடுகிறார்.
Exams Daily Mobile App Download
சரவணனை போக வேண்டாம் என்று சொல்லி விட்டு அவரை துரத்திக் கொண்டு சந்தியா மறுபக்கம் ஓட அவரை செந்தில் நிறுத்துகிறார். மறுபக்கத்தில், பாமை தூக்கிக் கொண்டு செல்லும் சரவணன் ஒரு மலைக்கு கீழ் இறங்க அந்த பாம் திடீரென வெடித்து விடுகிறது. இப்போது சரவணனுக்கு என்ன ஆனது என்று தெரியாமல் சந்தியா உட்பட குடும்பத்தார் அனைவரும் அழுது புலம்பவது போல ‘ராஜா ராணி 2’ சீரியலின் அடுத்தகட்ட கதைக்களத்திற்கான ப்ரோமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை தூண்டி இருக்கிறது.