காணாமல் போன பார்வதி, தேடி அலையும் குடும்பத்தினர் – “ராஜா ராணி 2” சீரியல் இன்றைய எபிசோட்!

0
காணாமல் போன பார்வதி, தேடி அலையும் குடும்பத்தினர் -
காணாமல் போன பார்வதி, தேடி அலையும் குடும்பத்தினர் - "ராஜா ராணி 2" சீரியல் இன்றைய எபிசோட்!
காணாமல் போன பார்வதி, தேடி அலையும் குடும்பத்தினர் – “ராஜா ராணி 2” சீரியல் இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில் பல தடைகளை தாண்டி பார்வதி பாஸ்கர் திருமணம் நடைபெறுகிறது. இந்நிலையில் பார்வதி செல்வம் கடைக்கு செல்ல அங்கே செல்வத்தின் உண்மை முகம் தெரிந்தவுடன் பார்வதியை கட்டிப் போட்டு வாய்யை மூடி விடுகிறார். அதனால் பார்வதியை காணாமல் பாஸ்கரும் குடும்பத்தினரும் பல இடங்களில் தேடி அலைகின்றனர்.

ராஜா ராணி 2:

சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று தான் ராஜா ராணி 2. இந்த சீரியலின் முதல் சீசனில் இருந்த கதைக்கு அப்படியே மாறுதலாக புதிய கதையுடன் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. சந்தியா சரவணன் கதாபாத்திரங்களில் நடிகர் சித்து மற்றும் ரியா நடித்து வருகின்றனர். படிக்காத கணவரை திருமணம் செய்து கொண்ட சந்தியா வாழ்க்கையில் தன்னுடைய கனவை நினைவாக்க எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார் என்பதை பொறுத்தே கதை இருக்கிறது.

இதயத்தை கொண்டு வந்த பாரதிக்கு வரும் சிக்கல், கண்ணம்மாவின் சூப்பர் திட்டம் – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

இந்நிலையில் தற்போது ஒளிபரப்பான எபிசோடுகளில் பார்வதியை விக்கி காதலிக்க ஆனால் விக்கியின் சுய ரூபம் தெரிந்து பார்வதி விக்கியை திருமணம் செய்யாமல் விலகுகிறார். பின் பாஸ்கர் பார்வதியை துரத்தி துரத்தி காதலிக்க வீட்டில் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் முடிகிறது. அதில் ஏகப்பட்ட பிரச்சனை வந்தாலும் சந்தியாவின் புத்திசாலித்தனத்தால் திருமணம் நடக்கிறது. இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கடைக்கு போன பார்வதி செல்வத்தின் உண்மை முகம் தெரிய செல்வம் பார்வதியை கட்டி போடுகிறார். அப்போது பார்வதியை காணாமல் அவரை தேடி பாஸ்கர் வருகிறார்.

இதற்கிடையே அர்ச்சனா தன்னுடைய தங்கை பிரியாவிற்கு போன் செய்கிறார். ஆனால் பாஸ்கரை திருமணம் செய்யாமல் இருப்பதால் ப்ரியா கோவமாக இருக்கிறார். அதனால் அர்ச்சனாவின் போனை எடுக்காமல் இருக்கிறார். ஆனால் அர்ச்சனா மீண்டும் மீண்டும் போன் செய்ய என்ன வேண்டும் என்னை தான் நீ பாஸ்கரை திருமணம் செய்வதாக சொல்லி ஏமாற்றி விட்டாய் என கேட்கிறார். அப்போது பாஸ்கர் இல்லையென்றால் என்ன நான் உனக்கு வெளிநாடு மாப்பிள்ளை பார்த்துள்ளதாக அர்ச்சனா சொல்கிறார்.

Exams Daily Mobile App Download

அதனால் ப்ரியா சந்தோசப்படுகிறார். பாஸ்கர் பார்வதியை தேடி கடைக்கு வர அங்கே செல்வம் வரவில்லை என சொல்கிறார். அவர் பேச்சை நம்பி பாஸ்கர் வீட்டிற்கு செல்கிறார். ஆனால் வீட்டில் பார்வதி இல்லாததால் குடும்பத்தில் அனைவரும் பார்வதியை தேடி அலைகின்றனர். பின் சரவணன் நேராக கடைக்குச் சென்று செல்வத்தையும் சட்டையை பிடித்து பார்வதி கடைக்கு வரலையா உண்மையை சொல்லு என கேட்கிறார். இல்ல பார்வதி வரல பாஸ்கர் இப்பதான் வந்து கேட்டுட்டு போனாரு இப்ப நீங்க வந்திருக்கீங்க என கூறுகிறார். பார்வதி வந்தா உடனே எனக்கு போன் பண்ணு என கூறிவிட்டு செல்கிறார். அவர்கள் சென்றதும் இந்த ஜில்லா முழுக்க தேடினாலும் பார்வதி கிடைக்க மாட்டா என கூறுகிறார் செல்வம். பல இடங்களில் குடும்பத்தில் அனைவரும் பார்வதியை தேடி அலைகின்றனர் இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!