சந்தியாவை பார்த்த மகிழ்ச்சியில் சரவணன், பஸ் விபத்தை அறிந்து பதட்டத்தில் குடும்பத்தினர் – இன்றைய எபிசோட்!

0
சந்தியாவை பார்த்த மகிழ்ச்சியில் சரவணன், பஸ் விபத்தை அறிந்து பதட்டத்தில் குடும்பத்தினர் - இன்றைய எபிசோட்!
சந்தியாவை பார்த்த மகிழ்ச்சியில் சரவணன், பஸ் விபத்தை அறிந்து பதட்டத்தில் குடும்பத்தினர் - இன்றைய எபிசோட்!

சந்தியாவை பார்த்த மகிழ்ச்சியில் சரவணன், பஸ் விபத்தை அறிந்து பதட்டத்தில் குடும்பத்தினர் – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில், திருநெல்வேலி பேருந்து விபத்து ஏற்பட்டதாக கவிதா கூறுகிறார். உடனே குடும்பத்தினர் சந்தியா சரவணனுக்கு என்ன நடந்திருக்கும் என பதட்டத்தில் இருக்கின்றனர். பின் சரவணன் சந்தியாவை பார்த்துவிட எதுவும் ஆகவில்லை என்ற சந்தோஷத்தில் கட்டி அணைத்து கொள்கிறார்.

ராஜா ராணி 2:

இன்று “ராஜா ராணி 2” சீரியலில், சரவணன் சந்தியாவை அழைத்துக் கொண்டு எந்த பேருந்தில் சென்றிருக்கிறார் என கவிதா கேட்கிறார். திருநெல்வேலி பேருந்து என சொல்ல, அந்த பேருந்து தான் விபத்து ஏற்பட்டது என கவிதா சொல்லி அழுகிறார். இதை கேட்ட குடும்பத்தினர் பதட்டம் அடைந்து அழுகின்றனர். சிவகாமி சந்தியாவிற்கு நானே சாபம் விட்டேன் அதனால் தான் இப்படி எல்லாம் நடக்கிறது. அவளுக்கு எதுவும் நடக்காமல் இருக்க வேண்டும் என அழுது புலம்பி மயங்கி விழுகிறார்.

செழியன் மனதை மாற்றும் ஜெனி, அமிர்தா வீட்டிற்கு செல்லும் பாக்கியா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!

குடும்பத்தில் இருப்பவர்கள் இருவருக்கும் எதுவும் ஆகாது என ஆறுதல் சொல்கின்றனர். ஆனால் சிவகாமி கேட்காமல் சாமி அறை சென்று அழுகிறார். சரவணனும் சந்தியாவும் நல்லபடியாக வர வேண்டும் என அழுகிறார். உடனே அர்ச்சனா ஊஞ்சலில் அமர்ந்திருக்க, பார்வதி சந்தியா அண்ணிக்கு விபத்து நடந்தால் சந்தோசமாக இருப்பது அர்ச்சனா அண்ணி தான் என சொல்லி அருகில் சென்று பார்க்கிறார். ஆனால் அர்ச்சனா அழுது கொண்டிருக்க, என்னாச்சு என கேட்கிறார்.

சந்தியாவை வீட்டை விட்டு அனுப்ப நான் எல்லாம் நினைத்தேன், ஆனால் இப்படி விபத்து ஏற்பட வேண்டும் என நான் நினைக்கவே இல்லை என சொல்கிறார். பின் இருவரும் போன் செய்து பார்க்கின்றனர். சிவகாமி சரவணன் சந்தியாவின் திருமண புகைப்படத்தை பார்த்து அழுது கொண்டிருக்கிறார். குடும்பத்தினர் எவ்வளவோ ஆறுதல் சொல்ல சிவகாமி கேட்பதாக இருக்கிறார். இந்நிலையில் சரவணன் சந்தியாவை காணவில்லை என நினைத்து வருத்தப்படுகிறார்.

லட்சுமி அம்மாவிற்கு இறுதி சடங்கு நடத்தும் குடும்பத்தினர், எதுவும் தெரியாமல் இருக்கும் கண்ணன் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!

அழுது கொண்டே சந்தியா என கத்தி கூப்பிட, சந்தியா ஒரு பையனை தூக்கிக் கொண்டு காப்பாற்றுங்கள் என கத்திக் கொண்டே வருகிறார். சரவணன் சந்தியாவை பார்த்து சந்தோஷத்தில் இருக்க, சந்தியாவும் சரவணனை பார்த்து சந்தோஷத்தில் இருக்கிறார். அப்போது சரவணன் அருகே சந்தியா வந்து சந்தியாவை கட்டி அணைத்து சரவணன் மகிழ்ச்சியை தெரிவிக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!