‘ஷ்ரேயாவை எனது மனைவியாக நினைக்கவில்லை’ – மனம் திறந்த ‘ராஜா ராணி’ சீரியல் சித்து!
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “திருமணம்” சீரியலில் ஒன்றாக நடித்து காதலித்து சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர் சித்து ஸ்ரேயா ஜோடி. திருமணம் முடிந்த கையோடு உணர்ச்சிகரமான பதிவு ஒன்றை சித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
சித்து ஸ்ரேயா ஜோடி:
விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில் ஹீரோவாக சரவணன் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் சித்து. அவர் அதில் ஆலியா மான்சாவுடன் ஜோடியாக நடித்து வருகிறார். இதற்கு முன்பு இவர் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் “திருமணம்” என்ற சீரியலில் அறிமுகமானார். அதே சீரியலில் அவருக்கு ஜோடியாக நடித்த ஸ்ரேயா என்பவரை பல மாதங்களாக காதலித்து வந்தார். இந்த அழகான ஜோடி பல நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொண்டது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.
விவாகரத்திற்கு பின்னர் சமந்தாவிற்கு அடித்த ஜாக்பாட் – என்ன தெரியுமா? ரசிகர்கள் உற்சாகம்!
மேலும் திருமணம் சீரியல் மூலமாக அவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர். சமீப காலமாக சொல்லி வைத்தது போல சின்னத்திரை நடிகர், நடிகைகள் காதலித்து திருமணம் செய்து வருகின்றனர். அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்த வைஷ்ணவி, ஜீ தமிழ் சீரியல் ரேஷ்மா மதன், செம்பருத்தி புகழ் ஷபானா ஆரியன் ஆகியோர் வரிசையாக திருமணம் செய்து கொண்டனர். அந்த வரிசையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சித்து, ஸ்ரேயா திருமணம் கடந்த 21 ஆம் தேதி நடைபெற்றது.
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் முல்லைக்கு பிறந்தநாள் – ரசிகர்கள் வாழ்த்து மழை!
ரீல் ஜோடியாக நடித்து, ரியல் ஜோடியாக மாறிய சித்து ஸ்ரேயாவிற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது குறித்து சித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் மனம் உருகி பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் திருமணம் சீரியலில் திருமணக்கோலத்தில் எடுத்த புகைப்படம் மற்றும் உண்மையாக திருமணம் செய்து கொண்ட புகைப்படத்தை ஷேர் செய்து “திருமணம் சீரியல் பன்ணும் போது எனக்குக் கொஞ்சம் கூட தெரியாது இந்த பொண்ணு தான் என் பொண்டாட்டியா வரப்போகுதுன்னு. எங்க ஆடியன்ஸ் சொல்வாங்க, நீங்க ரெண்டு பேரும் ஒரு மேஜிக்ன்னு, அது உண்மை தான் போல. பியூட்டிஃபுல் ஃபீலிங், நான் கேக்காமலே கெடச்ச வரம் தான் ஷ்ரேயா. லவ் யூ” என குறிப்பிட்டிருக்கிறார்.