போட்டியில் வெற்றி பெற்ற பரிசாக சந்தியாவிடம் காதலை வெளிப்படுத்திய சரவணன் – ‘ராஜா ராணி 2’ ப்ரோமோ!

0
போட்டியில் வெற்றி பெற்ற பரிசாக சந்தியாவிடம் காதலை வெளிப்படுத்திய சரவணன் - 'ராஜா ராணி 2' ப்ரோமோ!
போட்டியில் வெற்றி பெற்ற பரிசாக சந்தியாவிடம் காதலை வெளிப்படுத்திய சரவணன் - 'ராஜா ராணி 2' ப்ரோமோ!
போட்டியில் வெற்றி பெற்ற பரிசாக சந்தியாவிடம் காதலை வெளிப்படுத்திய சரவணன் – ‘ராஜா ராணி 2’ ப்ரோமோ!

ராஜா ராணி 2 சீரியல் தற்போது அடுத்தகட்டத்தை நோக்கி முன்னேற தயாராகி உள்ளது. இதுநாள் வரை சந்தியாவும் சரவணனும் தங்களது காதலை வெளிப்படுத்திக் கொள்ளாத நிலையில் இவர்கள் காதலை வெளிப்படுத்தி ஒன்றாக சேருவது போல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

ராஜா ராணி 2:

விஜய் டிவியில் மக்களின் மனம் கவர்ந்த சின்னத்திரை நட்சத்திரங்களின் சீரியல்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. ராஜா ராணி 2 சீரியல் தற்போது மிகவும் பரபரப்பாக சென்று வருகிறது. சந்தியா மற்றும் சரவணன் இருவரும் சமையல் போட்டியில் கலந்து கொள்வதற்காக சென்னைக்கு வந்துள்ளனர். போட்டியில் ஒவ்வொரு கட்டமாக முன்னேறி செல்லும் சரவணன், முக்கிய கட்டத்தில் குடும்பத்தினரை மிஸ் செய்வதை உணர்ந்த சந்தியா, சரவணனுக்கு தெரியாமல் குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைக்கிறார். இந்நிலையில், ஒரு கட்டத்தில் சரவணனுக்கு போட்டியின் காரணமாக ஏற்பட்ட மனஅழுத்தத்தினால் திடீரென்று மயங்கி விழுந்து விடுகிறார்.

“நாம் இருவர் நமக்கு இருவர்” சீரியலில் இருந்து விலகும் மிர்ச்சி செந்தில்? அவரே சொன்ன விளக்கம்!

மருத்துவமனையில் சேர்த்த பின்னர் அவருக்கு கை செயலிழந்து போய் விட்டதாக கூறுகிறார் மருத்துவர். சிறு வயதில் இது போல் அவருக்கு ஏற்பட்டிருந்தால் சரியாகி விடும் என்று நம்பிக்கை அளிக்கிறார். சரவணனுக்கு உடம்பு சரியில்லாமல் இருப்பதை அறிந்த சிவகாமி உடனடியாக சென்னைக்கு கிளம்பி வந்து விடுகிறார். சிவகாமி, ஆதி, அர்ச்சனா இவர்கள் மூன்று பேரும் சரவணனுக்கு இப்படி ஆனதற்கு சந்தியா தான் காரணம் என்று திட்டுகிறார்கள். இதனால் இனி போட்டியில், சரவணன் கலந்து கொள்ள வேண்டாம், ஊருக்கு போகலாம் என்று கூறுகின்றனர். ஆனால் சந்தியா விடாபிடியாக சரவணன் போட்டியில் நிச்சயம் ஜெயிப்பார், ஊருக்கு போக வேண்டாம் என்று கூறிவிடுகிறார்.

‘செம்பருத்தி’ ஷபானா, நடிகர் ஆர்யனுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு? ரசிகர்கள் ஷாக்!

இந்நிலையில், சரவணன் கலந்து கொள்ளும் இறுதி போட்டி நாளும் வந்து விடுகிறது. இதில்,போட்டியாளர்கள் 8 பேரும் ஜோடியாக சேர்ந்து சமைக்க வேண்டும் என்றும், கொடுத்துள்ள பொருளை வைத்து 5 டிஷ் சமைக்க வேண்டும் என்றும் அறிவிக்கிறார்கள். இதில், சரவணனுக்கு ஜோடியாக சல்மா வந்து விடுகிறார். இவர்களுக்கு சமைக்க பாகற்காய் கொடுக்கப்பட்டது. சல்மா எனக்கு பாகற்காய் வைச்சு எதுவும் சமைக்க தெரியாது என்று சொல்கிறார். உடனே சரவணன் எனக்கு நல்லா தெரியும், நீங்க தள்ளுங்க என்று கூறி சூப்பராக சமைத்து முடிக்கிறார். போட்டியில் வெற்றியாளர் அறிவிக்கும் போது சரவணன், சல்மா பெயர் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டது. இதன்பிறகு, சரவணன் வெளியில் வந்து சந்தியாவிடம் தன் காதலை வெளிப்படுத்துகிறார். இதனால் இனி வரும் எபிசோடுகள் குறித்து ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!