சந்தியா மீது சரவணன் காட்டும் அக்கறை, உண்மையை தெரிந்து கொண்ட சந்தியா – “ராஜா ராணி 2” ப்ரோமோ!
விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில் சந்தியா, சரவணனுக்கு இடையே என்ன தான் கருத்து வேறுபாடு இருந்தாலும் அவர்களுக்கிடையே இருக்கும் காதலை விவரிக்கும் புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.
ராஜா ராணி 2:
விஜய் டிவியில் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் ராஜா ராணி 2 சீரியலில் மாறுபட்ட கதைக்களம் அமைந்துள்ளது. படிப்பில் மிகவும் திறமையான சந்தியா, தெரியாமல் படிக்காத சரவணனை கல்யாணம் செய்து கொள்கிறார். அதன் பின்னர் உண்மை தெரிந்தாலும் இருவருக்கும் கருத்து வேறுபாடு எதுவும் இல்லாமல் நன்றாக போய்க்கொண்டிருக்கிறது.
பாக்கியா காலில் ஏற்பட்ட பலத்த காயம், வேலை வாங்கும் மாமியார் – வெளியான ப்ரோமோ!
குடும்பத்தில் அடிக்கடி பிரச்சனைகள் வந்தாலும் சந்தியாவிற்கு ஆதரவாக சரவணன் இருக்கிறார். இந்நிலையில் சந்தியா விவாகரத்து கேட்பதாக சரவணன் தவறாக புரிந்து கொண்டு அவர் மீது கோவமாக இருக்கிறார். இந்நிலையில் அடுத்த வாரம் நடைபெற உள்ள எபிசோட் குறித்த புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் சந்தியா, அர்ச்சனா, சிவகாமி கையில் மருதாணி போட்டு படுத்திருக்கின்றனர்.
அப்போது சரவணன் யாருக்கும் தெரியாமல் வந்து சந்தியாவிற்கு கொசுவத்தி வைக்கிறார். மேலும் சந்தியா கையில் கொசு கடிதத்தை பார்த்து அடித்து விடுகிறார். அப்போது மருதாணி சரவணனின் கையில் ஒட்டிவிட்டது. பின்னர் அர்ச்சனா எழும்ப அங்கிருந்து சரவணனன் ஓடுகிறார். அர்ச்சனா கை மீது மிதித்துவிட்டு ஓடுகிறார். அர்ச்சனா எழுந்து கத்தவே அனைவரும் எழுந்து விடுகின்றனர்.
TN Job “FB Group” Join Now
உடனே சந்தியா யாரு கொசுவத்தி வைத்தது என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளார். அப்போது எதுவும் இல்லை என சிவகாமி படுக்க சொல்கிறார். காலையில் எழுந்து சரவணனும், சந்தியாவும் தெரியாமல் முட்டிக் கொள்கின்றனர். அப்போது சந்தியா சரவணனின் கையை பார்த்து விடுகிறார். நீங்க தான கொசுவத்தி வைத்தது என்று கேட்கிறார். இதனால் சந்தியாவும், சரவணனும் சேர்ந்து விட்டனரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது