சந்தியா விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்திட்டு, வீட்டை விட்டு அனுப்பும் சரவணன் – இன்றைய எபிசோட்!
விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில், நிச்சயதார்த்தம் முடிந்த பின்னர் மாப்பிள்ளையின் அம்மா பார்வதி படித்து முடித்த பின்னர் திருமணம் வைத்து கொள்ளலாம் என சொல்கின்றனர். அதை கேட்டு சிவகாமிக்கு பயங்கரமாக கோவம் வந்துவிடுகிறது. இது தான் சரியான சமயம் என நினைத்து சரவணன் வீட்டை விட்டு வெளியே அனுப்ப நினைக்கிறார்.
ராஜா ராணி 2:
இன்று “ராஜா ராணி 2” சீரியலில், பார்வதிக்கும் பாஸ்கருக்கும் நிச்சயதார்த்தம் நல்லபடியாக நடந்து முடிகிறது. சந்தியா, திருமணத்தை படித்து முடித்த பின்னர் வைக்கலாம் என சொல்லிக்கொண்டே இருக்க, சிவகாமி காதில் வாங்காமல் இருக்கிறார். மாப்பிள்ளையின் அம்மா கல்யாணத்தை சில நாள் கழித்து வைக்கலாம் என சொல்ல சிவகாமி அதிர்ச்சி அடைகிறார். என்னாச்சு என கேட்க பார்வதி இப்போது தான படித்து கொண்டிருக்கிறார். இன்னும் 1 வருடம் படிப்பு முடிந்த பின்னர் கல்யாணம் வைத்து கொள்ளலாம் என சொல்கிறார்.
நடிகை பரினாவின் கர்ப்பகால போட்டோஷூட் – வைரலாகும் இன்ஸ்டா புகைப்படம்!
சந்தியா சொன்ன பின்னர் தான் எனக்கு இது ஞாபகம் வந்தது என சொல்கிறார். சந்தியா நான் எப்போது சொன்னேன் என நினைத்து பார்க்கிறார். மாப்பிளை வீட்டில் உள்ளவர்கள் கிளம்பியதும் சிவகாமி கோவத்தில் கத்துகிறார். ஏற்கனவே என் பையன் வாழ்க்கையை ஒருத்தி கெடுத்துவிட்டு போய்ட்டாள். இவர்கள் ஒரு வருடத்தில் மனம் மாறிவிட்டால் என்ன செய்வது என சிவகாமி சந்தியாவை கேள்வி கேட்கிறார்.
கட்டாயம் சந்தியா சொல்லியிருக்க மாட்டார் என செந்தில் நினைத்து சந்தியாவிற்கு சப்போர்ட் செய்கிறார். ஆனால் கோபத்தில் உச்சியில் இருக்கும் சிவகாமி என் குடும்பத்தில் நிம்மதியை கெடுப்பதற்காக வந்திருக்க என திட்டுகிறார். ஆதியும் போதாததற்கு என் தங்கச்சி வாழ்க்கையை இப்படி செஞ்சுட்டிங்க என திட்டுகிறார். அர்ச்சனா தன் பங்கிற்கு பேச யாரும் சந்தியாவை பேச விடுவதாக இல்லை.
உடனே சரவணன் திட்டமிட்டு இது தான் சரியான நேரம் என நினைத்து இனிமேல் வீட்டில் இருக்காதீங்க என சொல்லி அவரை ரூமிற்கு அழைத்து சென்று, இது என் குடும்பத்திற்காக சொல்லவில்லை. உங்க வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக சொல்கிறேன் என சொல்லி விவாகரத்து பேப்பர் காட்டி உங்களுக்கு இது தான என்னிடம் இருந்து வேண்டும் நான் தருகிறேன், உங்களது வாழ்க்கையை பார்த்துவிட்டு சந்தோசமாக இருங்க என சொல்கிறார்.
சந்தியா இது தான் என் வீடு என சொல்லி அழுது புலம்ப, இதை நான் வாங்கவில்லை என சந்தியா சொல்கிறார். அப்போ இது எப்படி இங்கே வந்தது என சரவணன் கேட்க, அது வந்து என சொல்ல வருகிறார். ஆனால் சரவணன் குறுக்கிட்டு சொல்ல விடாமல் செய்கிறார். நீங்க இந்த வீட்டை விட்டு சென்றால் தான் நன்றாக இருப்பீங்க என சொல்லி விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.