சந்தியா, சரவணனை சேர்த்து வைக்க திட்டமிடும் சிவகாமி – இன்றைய ‘ராஜா ராணி 2’ எபிசோட்!

0
சந்தியா, சரவணனை சேர்த்து வைக்க திட்டமிடும் சிவகாமி - இன்றைய 'ராஜா ராணி 2' எபிசோட்!
சந்தியா, சரவணனை சேர்த்து வைக்க திட்டமிடும் சிவகாமி - இன்றைய 'ராஜா ராணி 2' எபிசோட்!
சந்தியா, சரவணனை சேர்த்து வைக்க திட்டமிடும் சிவகாமி – இன்றைய ‘ராஜா ராணி 2’ எபிசோட்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “ராஜா ராணி” சீரியலில் இன்று சிவகாமி சந்தியாவிடம் சரவணனின் மாறுதல் குறித்து கேட்கிறார். இருவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவதாக கூறுகிறார். சரவணனை சமாதானம் செய்ய வேண்டும் என்று சந்தியா அழகாக தயாராகி அவருக்காக காத்திருக்கிறார்.

“ராஜா ராணி 2” சீரியல்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “ராஜா ராணி 2” சீரியலில் இன்று சிவகாமி சந்தியாவிடம் சரவணன் ஏன் சிறிது நாட்களாக இப்படி இருக்கிறார் என்று கேட்கிறார். அதற்கு சந்தியாவால் பதிலளிக்க முடியவில்லை. இந்த குடும்பமே சந்தியாவிற்கு எதிராக நின்ற போது சரவணன் சந்தியாவிற்கு ஆதரவாக பேசினார் என்றும் சரவணன் யார் மனத்தினையும் புண்படுத்த மாட்டார் என்றும் கூறுகிறார். அப்படிபட்ட ஒருவன் தற்போது சந்தியாவிடம் பேசவில்லை என்றால் அவரது மனது காயப்பட்டு இருக்கும், அதனால் அதனை சரி செய்யுமாறு சந்தியாவிடம் கூறுகிறார்.

147 ஐஐடி பேராசிரியர் காலிப்பணியிடங்கள் – மத்திய கல்வி அமைச்சர் தகவல்!

பின், சரவணன் வீட்டிற்கு பக்கத்து வீட்டு பெண் ஒருவர் வந்து தனது மருமகளுக்கு பெண் பிள்ளை பிறந்து இருக்கின்றது என்றும் மருமகள் மற்றும் மகனுக்கு இன்று திருமண நாள் என்று கேசரி கொண்டு வந்து கொடுக்கிறார். பின், இருவரும் சில விஷயங்கள் பற்றி பேசும்போது கணவன் மற்றும் மனைவி இருவருக்குமான சண்டை பற்றி பேசுகின்றனர். அப்போது சிவகாமி தனக்கும் தனது கணவருக்கும் சண்டை வந்தால், 2 நாட்கள் தான் நீடிக்கும் என்றும் தான் அவரிடம் சண்டை போட்டால், நன்றாக உடை அணிந்து, வீட்டை சுத்தம் செய்து அவருக்கு பிடித்தமாதிரி நடந்து கொள்வேன் என்று கூறுகிறார். இதனை தூரத்தில் இருந்து கேட்கும் சந்தியா தானும் இது போல செய்தால் என்ன என்று யோசிக்கிறார்.

TN Job “FB  Group” Join Now

அதனை செயல்படுத்தவும் செய்கிறார். சந்தியாவின் மாறுதலை பார்த்து சிவகாமி மகிழ்ச்சி அடைகிறார். பின், சந்தியா சரவணனின் வருகைக்காக காத்து இருக்கிறார். அப்போது அர்ச்சனா மற்றும் அவரது கணவர் இருவரும் சந்தியா மற்றும் சரவணன் பற்றி பேசுகின்றனர். இருவருக்கும் சண்டை என்றும், சரவணன் தான் சந்தியாவிடம் கோபம் கொண்டுள்ளதாக கூறுகிறார். அப்போது, இருவர் பேசுவதையும் ஆதி மற்றும் பார்வதி கேட்கின்றனர். பின், சந்தியா வெகு நேரம் ஆகியும் சரவணன் வராததை எண்ணி வருந்துகிறார். லேட்டாக வீட்டிற்கு வரும் சரவணன் சந்தியா இருப்பார் என்று மீண்டும் கடைக்கு சென்று விடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைந்து விடுகிறது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!