சமையலில் சொதப்பும் சந்தியா; கற்றுக்கொடுக்கும் சரவணன்- இந்த வார ‘ராஜா ராணி 2’ புரோமோ!
சமையலில் கத்துக்குட்டியாக இருக்கும் சந்தியா சமையல் போட்டியில் கலந்து கொள்வதாக ஒத்துக் கொண்டதால், சரவணன் சந்தியாவிற்கு சமையல் கற்றுக் கொடுக்கும் காட்சிகள் தான் இந்த வார ‘ராஜா ராணி 2’ சீரியலின் புரோமோவாக வெளியிடப்பட்டுள்ளது.
‘ராஜா ராணி 2’:
IPS அதிகாரியாக ஆக வேண்டும் என்ற கனவுடன் வாழ்ந்து வரும் சந்தியாவை, படிக்காத ஸ்வீட் ஸ்டால் வைத்திருக்கும் சரவணனுக்கு திருமணம் செய்து வைத்துவிடும் படி ஆரம்பித்தது ‘ராஜா ராணி 2’ சீரியல். இதில், சரவணனின் அம்மா தனக்கு படிக்காத பெண் தான் மருமகளாக வர வேண்டும் என்றும், வீட்டு வேலைகள் அனைத்தையும் தெரிந்த பெண் தான் தனது குடும்பத்தை நன்றாக பார்த்துக் கொள்வாள் என்றும் கூறி தனது மகனுக்கு பெண் பார்ப்பார். சந்தியாவின் அண்ணன் சந்தியா படிக்காதவள் என்று கூறி சரவணனுக்கு திருமணம் செய்து வைத்து விடுவார். அதன் பிறகு நடக்கும் கதைகள் தான் ‘ராஜா ராணி 2’ சீரியல்.
மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் உயர்வு? – மத்திய அரசு!
மிகவும் விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கும் சீரியலில் இந்த வாரம், அவர்களது ஏரியாவில் சமையல் போட்டி ஒன்று நடப்பதாகவும், அதில் சந்தியாவை கலந்து கொள்ளும் படியும் அவர்களுக்கு தெரிந்த ஒருவர் கூற, அதை கேட்ட அர்ச்சனா கிண்டலுடன் சிரிக்கிறார். உடனே சந்தியா தனது அத்தையின் சந்தோஷத்திற்காக சமையல் போட்டியில் கலந்து கொள்வதாக சொல்கிறார். இதனால் சரவணனின் அம்மா அதிர்ச்சி அடைகிறார்.
TN Job “FB Group” Join Now
சமையல் போட்டியில் கலந்து கொள்ள இருக்கும் சந்தியாவிற்கு பயிற்சி அளிப்பதற்காக சரவணன் வருகிறார். அங்கே தொடங்குகிறது சந்தியாவின் சொதப்பல்கள். சரவணன் ஒன்று சொல்ல சந்தியா வேறு ஒன்று செய்ய ஒரே ரகளையான காட்சிகள் வருகிறது. இறுதியில் ஒரு வழியாக லட்டு செய்து முடிப்பது போல் புரோமோ காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் இந்த வாரம் ‘ராஜா ராணி 2’ சீரியல் காட்சிகள் அனைத்தும் அசத்தலாக இருக்கும் என்பது தெரிகிறது.
“நாம் இருவர், நமக்கு இருவர்” சீரியல் விடீயோவை பார்க்க கிளிக் பண்ணுங்க!!