பாஸ்கரின் மனதை கெடுக்கும் விக்கி, ஆதிக்கு பைக் தர மறுக்கும் சந்தியா – இன்றைய ‘ராஜா ராணி 2’ எபிசோடு!
இன்றைய ‘ராஜா ராணி 2’ எபிசோடில் சரவணனின் புதிய பைக்கை ஆதி கேட்க லைசன்ஸ் இல்லாமல் வண்டியை ஓட்டக்கூடாது என கூறி வண்டியை கொடுக்க மறுத்துவிடுகிறார் சந்தியா. மறுபக்கத்தில் பாஸ்கருக்கு பார்வதி பற்றி தவறான எண்ணத்தை தூண்டி விடுகிறார் விக்கி.
ராஜா ராணி:
சரவணன் பைக் ஓட்ட கத்துக்கொண்டு லைசன்ஸ் வாங்கியதற்காக சந்தியா அவருக்கு சாக்லேட் வாங்கி கொடுக்கிறார். அதனை வாங்கிக்கொண்டு படுப்பதற்கு பாயை தேடுகிறார் சரவணன். அப்போது சிவகாமி சொல்லியதால் மயில், பாயை துவைத்து போட்டிருப்பதாக சந்தியா சொல்லிவிட்டு கட்டிலில் படுத்து உறங்க வேண்டும் என சந்தியா கூறுகிறார். பிறகு இருவரும் சாக்லேட் சாப்பிடுகின்றனர். இப்போது சந்தியாவை எரிச்சல் படுத்தும் விதமாக ரேணுகா டீச்சர், பக்கத்து வீட்டு தேன்மொழி பற்றி சரவணன் சொல்ல சந்தியா சிரிக்கிறார்.
இருவரும் பேசிக்கொண்டே இருக்க சந்தியா உறங்கி விடுகிறார். சந்தியா உறங்குவதை பார்த்து ரசித்துக்கொண்டிருக்கிறார் சரவணன். மறுபக்கத்தில் பாஸ்கரின் மனதை கெடுக்கும் விதமாக பார்வதி பற்றி தவறான எண்ணத்தை உருவாக்கி விடுகிறார் விக்கி. அடுத்த நாள் காலையில் புதிய பைக்கை துடைத்துக் கொண்டிருக்கும் சந்தியாவிடம் வந்து பைக் சாவி கேட்கிறார் ஆதி. ஆதியிடம் பைக் சாவியை கொடுக்கும் முன்னதாக லைசன்ஸ் இருக்கா என சந்தியா கேட்க ஆதி இல்லையென கூறுகிறார்.
லைசன்ஸ் இல்லாமல் பைக் சாவி தர மாட்டேன் என சந்தியா கூற, நான் அண்ணனிடம் வாங்கிக்கிறேன் என ஆதி சொல்லுகிறார். உங்க அண்ணன் சொன்னாலும் சாவியை தர மாட்டேன் என சந்தியா மறுக்கிறார். இதை பார்த்து அர்ச்சனாவும், செந்திலும் ஆதியை கலாய்க்கின்றனர். பிறகு லைசன்ஸ் இல்லாமல் வண்டியை ஓட்டினால் அது சட்ட விரோதம் என சந்தியா கூற அதனை கேட்கும் சிவகாமி, லைசன்ஸ் வாங்கி விட்டு வண்டியை ஓட்ட சொல்லி ஆதியை அனுப்பி விடுகிறார். இந்த சம்பவத்தை வைத்துக் கொண்டு ஒரு புது பிரச்சனையை உருவாக்க சிவகாமியை தூண்டி விடுகிறார் அர்ச்சனா.
ஹேமாவிடம் லட்சுமியை அக்கா என அழைக்க சொல்லும் கண்ணம்மா – இன்றைய ‘பாரதி கண்ணம்மா’ எபிசோடு!
இதை கேட்டதும் சந்தியாவை திட்டுவேன்னு நெனைக்குறியா என திட்டி விட்டு அர்ச்சனாவை அங்கிருந்து கிளப்பி விடுகிறார் சிவகாமி. பிறகு அண்ணன் தம்பிகளை ரூல்ஸ் பேசி பிரிச்சுடாத என சந்தியாவை கோபித்து கொள்கிறார் சிவகாமி. கடையில் சரவணன் கிளவுஸ் போட்டு வேலை செய்வதை பார்த்து சந்தோஷப்படுகிறார் சந்தியா. அப்போது, சந்தியாவை பைக்கில் வைத்து ஒரு ரவுண்ட் அடிக்க சொல்லி சர்க்கரை கூற இருவரும் செல்கின்றனர். இத்துடன் இன்றைய ‘ராஜா ராணி 2’ எபிசோடு முடிவடைகிறது.