மாடியில் மயங்கி விழும் சந்தியா, துடித்து போன சரவணன் – ‘ராஜா ராணி 2’ அடுத்த எபிசோட்!
விஜய் டிவியில் காதல் காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வரும் ‘ராஜா ராணி 2’ சீரியலின் லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
‘ராஜா ராணி 2’ சீரியல்
விஜய் டீவியில் பல காதல் மற்றும் ரொமான்ஸ் காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது, ராஜா ராணி 2 சீரியல். இந்த சீரியலில் தற்போது சரவணன் மற்றும் சந்தியா இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ்ந்து வருகின்றனர். சரவணன் மனதில் இருந்த தாழ்வு மனப்பான்மை தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறது. இந்த சூழலில் அடுத்து நடக்கவிருக்கும் காட்சிகள் பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. அது என்னவென்றால் செந்தில் மற்றும் அர்ச்சனா இருவரும் அர்ச்சனாவின் பிறந்தநாளை நன்றாகவும் மற்றும் விமர்சையாகவும் கொண்டாட வேண்டும் என்று நினைக்கின்றனர். அதற்கு அர்ச்சனா ஒரு ஐடியாவும் கொடுக்கிறார்.
கண்ணன், ஐஸ்வர்யாவை வீட்டில் சேர்த்துக்கொள்ள ஒத்துக்கொள்ளும் மூர்த்தி – அடுத்த எபிசோட்!
தனது பாட்டி மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக கூறி விடலாம் என்று செந்திலிடம் கூறுகிறார். செந்திலும் சரி என்று கூறி விடுகிறார். சிவகாமியிடம் அர்ச்சனா தனது பாட்டி என்றால் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும், அவருக்கும் தன்னை மிகவும் பிடிக்கும் என்றும் அதனால் நான் சென்று பார்த்து விட்டு வரவா? என்று கேட்கிறார். சிவகாமியும் யோசித்து விட்டு சரி என்று கூறி விடுகிறார்.
இரட்டை குழந்தைகள் பற்றிய உண்மையை கூறி விடும் சௌந்தர்யா – அதிர்ச்சியில் பாரதி!
இதனால் இருவரும் மகிழ்ச்சியாக செல்கின்றனர். பின்னர், சந்தியா மற்றும் சரவணன் இருவரும் வீட்டில் இருக்கின்றனர். அப்போது சந்தியா மாடியில் துணி காய போடுகிறார். அப்போது திடீர் என்று மயங்கி விழுகிறார். இதனை பார்த்து விட்டு சரவணன் துடித்து விடுகிறார். சிவகாமி கோபத்துடன் சந்தியாவை திட்டுகிறார். வீட்டில் ஒரு வேலை தான் செய்வதாகவும் அத்தனையும் இப்பொழுது ஒழுங்காக செய்வதில்லை என்றும் கூறுகிறார். வீட்டினர் அனைவரும் சந்தியாவை உடம்பை நன்றாக பார்த்து கொள்ளும்படி அறிவுறுத்துகின்றனர்.