கல்வி கட்டணத்தை உயர்த்த அனுமதி கோரி மேல்முறையீடு வழக்கு – உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு!
நாட்டில் கல்வி என்பது லாப நோக்கத்திற்காக செயல்பட கூடாது என்பதை வலியுறுத்தி உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. இதற்காக தொடரப்பட்டுள்ள வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வழக்கு ரத்து:
முன்னதாக கல்வி பயில்வதற்கான செலவுகள் தற்போதைய அளவுக்கு அதிகமானதாக இல்லை. இருப்பினும், ஏழை மக்களுக்கு கல்வி எட்டாக் கனியாக மாறிவிடக்கூடாது என்ற நோக்கத்தில் கல்வி தொடர்பான விஷயங்களில் அரசு எப்போதும் விழிப்புடன் செயல்பட்டு வருகிறது. ஆனால், தனியார் மயமாகிவிட்ட கல்வி நிறுவனங்கள் அனைத்தும் அதிக அளவிலான கட்டணத்தை வசூலித்து வருவதால் பலரின் கல்வி குறித்தான கனவு பாதியில் நின்று விடும் நிலை உள்ளது.
Follow our Instagram for more Latest Updates
இந்நிலையில், ஆந்திரா மாநிலத்தில் மருத்துவ கல்லூரிகளில் ஆண்டிற்கு ரூ.24 லட்சம் கட்டணம் உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டது. அதனால் ஆந்திர உயர்நீதிமன்றத்தில் இது சம்மந்தப்பட்டு மருத்துவ கல்லூரி கல்வி கட்டணத்தை உயர்த்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், ஆந்திர உயர்நீதிமன்றம் கல்வி கட்டண உயர்வை ரத்து செய்தது.
Exams Daily Mobile App Download
இதனால் மருத்துவக்கல்லூரி ஆந்திர உயர்நீதிமன்றத்தின் முடிவை ரத்து செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆந்திர உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்துள்ளது. மேலும், கல்வி என்பது வியாபாரத்திற்காகவோ, லாப நோக்கத்துடனோ இருக்க கூடாது என்று நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்