ஜூலை மாதம் மழைக்கால நாடாளுமன்ற கூட்டத்தொடர் – மத்திய அமைச்சர் அறிவிப்பு!!
நடப்பு ஆண்டிற்கான நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை மாதம் தொடங்க இருப்பதாக மத்திய அமைச்சர் பிரகாலத் ஜோஷி அறிவித்துள்ளார்.
அமைச்சரின் அறிவிப்பு:
நாட்டின் பாராளுமன்றம் முக்கிய ஆலோசனைகளுக்காக கூட்டப்படும். பாராளுமன்ற கூட்டத்தில் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும். நடப்பு ஆண்டில் இதற்கு முன்பாக நாட்டின் பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக கடந்த மார்ச் மாதம் பாராளுமன்றம் கூடியது. அப்போது நாட்டின் கடந்த நிதியாண்டுக்கான வரவு, செலவுகள், புதிய திட்டங்கள் போன்றவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
ஊரடங்கில் தளர்வுகளை அறிவிக்க வேண்டாம் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!
தற்போது நடப்பாண்டில் மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை மாதம் தொடங்க இருப்பதாக மத்திய அமைச்சர் பிரகாலத் ஜோஷி தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் இது குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார். மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி கண்டிப்பாக செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
பாராளுமன்ற கூட்டத்தில் நாட்டின் கொரோனா பரவல் நிலைமை, பாதிப்புகள், நாட்டின் பொருளாதாரம், கொரோனா முன்னேற்பாடு பணிகள், தடுப்பு நடவடிக்கை போன்றவற்றை குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். தற்போது நாட்டின் அனைத்து மாநிலங்களிலும், கொரோனா நோய் தொற்று பாதிப்புகள் மெல்ல குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.