மழைநீர் வடிகால் அமைப்பு பணிகள் – மாநகராட்சியின் முக்கிய உத்தரவு.. மீறினால் புகார் அளிக்கலாம்!
சென்னையில் மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் நடைபெறும் பகுதிகளில் மக்களின் நலன் கருதி தடுப்புகள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை ஒப்பந்ததாரர்கள் பின்பற்றுவதில்லை என்று புகார்கள் எழுந்து வருகிறது. இந்த நிலையில் மாநகராட்சி நிர்வாகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
முக்கிய உத்தரவு:
தமிழகத்தின் தலைநகர் சென்னை மழை காலம் வந்து விட்டாலே தண்ணீரில் மிதக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு பார்க்கும் இடமெல்லாம் மழை நீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கிறது. மேலும் மழைக்காலங்களில் நீர் நிலைகள் நிரம்பி அதன் உபரி நீர் குடியிருப்பு பகுதிகளில் தேங்குகிறது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
Follow our Instagram for more Latest Updates
அது மட்டுமல்ல, வாகன ஓட்டிகளும் நிரம்பியுள்ள தண்ணீருக்கு மத்தியில் வாகனத்தை இயக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். இதற்கு காரணம் பெரும்பாலான இடங்களில் மழைநீர் வடிகால்கள் இல்லாததே ஆகும். அதனால் சென்னை மாநகராட்சி மழைநீர் வடிகால்கள் இல்லாத இடங்கள் கண்டறிந்து தற்போது மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இத்தகைய பகுதிகளில் பொது மக்களின் பாதுகாப்பு கருதி தடுப்புகள் அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அதனை தொடர்ந்து இந்த தடுப்புகள் அமைப்பதற்காக நிலையான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது. ஆனாலும் இதனை ஒப்பந்ததாரர்கள் பின்பற்றுவதில்லை. இது குறித்து கண்டறியப்பட்டு பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. தற்போது மழைநீர் வடிகால் மற்றும் பிற சேவைகள் நடைபெறும் இடங்களில் தடுப்புகள் இல்லை என்றால் அதனை அறிந்த பொதுமக்கள் 1913 என்ற மாநகராட்சியின் உதவி எண்ணை அழைத்து புகார் தெரிவிக்கலாம் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.