சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கொட்டித் தீர்க்கும் கனமழை – வானிலை மையம் எச்சரிக்கை!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திடீரென கனமழை பெய்து வருகிறது. மேலும் அடுத்த 2 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கனமழை:
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த டிசம்பர் மாத தொடக்கத்தில் வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கியது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், தஞ்சாவூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பெய்த கனமழையால் சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. அதே போல் டெல்டா மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையால் பல ஏக்கர் நில பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. மேலும் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. ஏராளமானோர் மழை வெள்ளத்தால் தங்கள் உடமைகளை இழந்து தவித்தனர்.
SSC முதல் TNEB வரை அரசு போட்டி தேர்வு எழுதுவோர் கவனதிற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு
இதனால் பொதுமக்கள் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியில் செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்த சூழலில் மாணவர்களை கருத்தில் கொண்டு சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பிறகு படிப்படியாக மழை குறைய ஆரம்பித்து தற்போது அதிக பனிப்பொழிவு நிலவி வருகிறது. இந்த நேரத்தில் மீண்டும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில மணி நேரமாக இடி,மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட மாட்டாது – அரசுக்கு கண்டனம்!
சென்னை சென்ட்ரல், எழும்பூர், புரசைவாக்கம், அமைந்தகரை, கிண்டி, மாம்பலம், சைதாப்பேட்டை, சேத்துப்பட்டு உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தற்போது சென்னையில் பெய்து வரும் திடீர் கனமழை காரணமாக சாலைகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் மீண்டும் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அடுத்த 2 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.