தமிழகத்தில் இன்னும் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் – சென்னை வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியுள்ளதால் பல்வேறு பகுதிகளில் வெயில் சுட்டெரிக்கிறது. இந்த நிலையில் தற்போது பல்வேறு இடங்களில் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்து கொண்டிருக்கிறது. தற்போது இன்றைய வானிலை நிலவரத்தை பற்றி விரிவாக பார்ப்போம்.
வானிலை தகவல்
தமிழகத்தில் வடகிழக்கு பருவக்காற்றின் காரணமாக நவம்பர் மாதத்தில் மழை பெய்து முடிந்துள்ள நிலையில் இப்போது கோடை காலம் தொடங்கியதால் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. அதனால் விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளார்கள். தமிழகத்தில் வளி மண்டல மேழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் தற்போது இன்று முதல் 4ம் தேதி வரையிலான வானிலை நிலவரத்தை பற்றி விரிவாக பார்ப்போம்.
Exams Daily Mobile App Download
வளி மண்டல மேழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக,
30.04.2022: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
01.05.2022: கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் (ஈரோடு, கரூர், திருச்சி , மதுரை, தூத்துக்குடி), சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
02.05.2022, 03.05.2022, 04.05.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை: தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு ஒரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 – 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை – மாதம் ரூ.45,000 ஊதியம்..!
சென்னையை பொறுத்தவரை:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை :
30.04.2022: லட்சத்தீவு கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.