தமிழகத்தில் பெய்து வரும் கனமழை – சென்னையில் மழைநீர் தேக்கம்.. மேயர் ஆய்வு! மீட்பு பணிகள் தீவிரம்!
தமிழகத்தில் மழை காலம் என்றால் எப்போதும் அதிகம் பாதிக்கப்படுவது தலைநகர் சென்னை தான். இந்த ஆண்டு சென்னை மாநகராட்சி வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மீட்பு பணிகள்:
தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையால் சென்னை நகரம் அதிக பாதிப்புக்கு ஆளாகியுள்ளது. தொடர் மழையால் நீர் நிலைகள் நிரம்பி தண்ணீர் சாலைகளில் தேங்கி உள்ளது. மழைநீரில் மக்கள் வாகனங்கள் மிதந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சாலை போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. தற்போது சென்னையில் திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
Exams Daily Mobile App Download
இதற்கு மத்தியில் சென்னை மாநகராட்சி மழை நீரை அகற்றும் பணியை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் நேற்று ஜீரோ பாயிண்ட் பகுதியில் மேயர் பிரியா ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்குள்ள சூழலை பார்வையிட்டு ஏரியில் கலந்துள்ள கழிவு நீரை உடனடியாக அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் மாவட்டம் முழுவதும் மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.
Post Office காப்பீட்டு திட்டம் – முதிர்வு காலத்தின் போது ரூ.13.72 லட்சம் ரிட்டன்!
Follow our Instagram for more Latest Updates
இவற்றை போர்க்கால அடிப்படையில் அகற்றும் பணிகளும் நடைபெற்று வருகிறது. சென்னையில் மழை காலம் முடிந்தவுடன் அனைத்து சாலைகளும் விரைவில் சீரமைக்கப்படும். மேலும் மழை நீரை அப்புறப்படுத்த 10 முதல் 100 குதிரை திறன் கொண்ட மோட்டார்கள், மின்மோட்டார், ராட்சத மோட்டார்கள் போன்ற அனைத்து உபகரணங்களும் எல்லா நேரங்களிலும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.