சென்னையில் மழை நீரை கண்காணிக்க சிறப்பு திட்டம் – ஐஐடி மாணவர்களுடன் இணைந்த மாநகராட்சி!
சென்னையில் மழை நீர் தேக்கத்தை சரி செய்ய மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது மழை நீர் தேக்கத்தை கண்காணிக்க ஐஐடி மாணவர்களுடன் இனைந்து மாநகராட்சி முயற்சியை மேற்கொண்டுள்ளது.
மழை நீர் கண்காணிப்பு:
தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையால் சென்னை நகரம் அதிக பாதிப்புக்கு ஆளாகியுள்ளது. தொடர் மழையால் நீர் நிலைகள் நிரம்பி தண்ணீர் சாலைகளில் தேங்கி உள்ளது. கடந்த 10 நாட்களாக பெய்த தொடர் மழையால் சென்னையில் சாலைகள் எங்கும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
Follow our Instagram for more Latest Updates
இதனால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். ஆண்டுதோறும் மழைகாலம் என்றாலே சென்னைக்கு இந்த நிலைமை தான். இதனை கருத்தில் கொண்டு நடப்பு ஆண்டு சென்னை மாநகராட்சி மழை நீரை தேங்க விடாமல் உடனுக்குடன் அகற்ற தேவையான பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.
தலைதூக்கும் வேலைவாய்ப்பின்மை விகிதம் .. அமெரிக்காவில் 1.2 லட்சத்தை தாண்டும் பணி நீக்க எண்ணிக்கை!
Exams Daily Mobile App Download
அந்த வகையில் தற்போது அனைத்து பகுதிகளிலும் தேங்கியுள்ள மழை நீரை கண்காணிக்க கிளவுட் சோர்சிங் மூலம் வாட்ஸ் அப் தகவல் அனுப்பும் திட்டத்தை ஐஐடி கட்டுமான துறை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் இணைந்து சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது. மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளை பொதுமக்கள் புகைப்படம் எடுத்து இந்த வாட்ஸ் அப்பில் அனுப்பி பிரச்சனைக்கு தீர்வு காணலாம் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.