தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் மழை – வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் உள்ள திருப்பூர், தேனி, தென்காசி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கனமழை குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் வரலாற்றுக்கு மாறாக இந்த ஆண்டு கீழடுக்கு சுழற்சி மற்றும் அசானி புயல் காரணமாக ஆங்காங்கே கனமழை முதல் மிதமான மழை பெய்து வந்தது. அதனை தொடர்ந்து தென்மேற்கு பருவமழை தொடங்கிய முதல் நாளில் இருந்தே பல்வேறு மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் தெலுங்கானா,டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா, மற்றும் கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது.
Exams Daily Mobile App Download
இதனால் கேரளா மாநிலத்தில் உள்ள மலையோர பகுதிகளில் நிலச்சரிவுகள், அதிகமாக பகுதிகளில் நீர் தேக்கங்கள் அனைத்தும் நிரம்பக் கூடிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகமான மழை பெய்ததால் அங்குள்ள அணைக்கட்டுகள், நீர் தேக்கங்கள் அனைத்தும் நிரம்பி உள்ளது. இதனால் வெள்ளம் ஏற்படுவதற்கான அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.
ரயில் பயணிகளுக்கான புதிய திட்டம் அறிமுகம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
மேலும், தமிழகம்,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது, அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள திருப்பூர், தேனி, தென்காசி, அரியலூர், மயிலாடுதுறை, நீலகிரி, கோவை, நாகை, தஞ்சை மற்றும் திருவாரூர் ஆகிய 10 மாவட்டங்களில் மிதமான முதல் அதிக கனமழை பெய்ய கூடும் என தெரிவித்துள்ளது.