தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!
தமிழகத்தின் ஒரு சில இடங்களில் தற்போது லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையின் அநேக இடங்களில் மழை பெய்யும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை தகவல்:
தமிழகத்தில் கடந்த அக்டோபர் 29ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கியது. தொடக்கத்தில் கொட்டி தீர்த்த கனமழையால் சென்னை நகரம் நீரில் மூழ்கியது. காணும் இடமெல்லாம் மழை நீர் சூழ்ந்து பொதுமக்களை பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கியது. சென்னையை தொடர்ந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது.
மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை – ஊரடங்கு அமல்! போராட்டத்தில் மக்கள்!
கடந்த 22 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பொழிவு இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த ஒரு வார காலம் மழை சற்று மழை தணிந்திருந்த நிலையில் இன்று காற்றின் மாறுபாடு காரணமாக மீண்டும் தமிழக மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில் தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு அதாவது டிசம்பர் 1ஆம் தேதி வரை மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
Telegram Updates for Latest Jobs & News – Join Now
மேலும் சென்னை நகரில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வெப்பநிலை அதிகபட்சமாக 32 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்சமாக 22 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.