அடுத்த 3 மணிநேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!
தமிழகத்தில், அடுத்த 3 மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. இந்த மழை சுமார் 11 மாவட்டங்களில் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழைக்கு வாய்ப்பு
கடந்த ஒரு சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலான அளவு மழை பெய்து வருகிறது. பருவமழையின் தாக்கம் முடிவுபெற்று கடுமையான பனி காணப்பட்டு வந்த நிலையில், இப்போது மீண்டுமாக மழைக்கான அறிகுறி துவங்கியுள்ளது. அதாவது, தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக சென்னை, கடலூர் உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இன்று லேசான மழை பெய்தது.
‘வந்தே பாரத்’ ரயில் பாதையில் தடுப்புகள் அமைக்கும் பணி – மத்திய அமைச்சர் தகவல்!!
Follow our Instagram for more Latest Updates
அதே நேரத்தில், தமிழகத்தின் 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்குள் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. அதன்படி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, பெரம்பலூர், கடலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.