தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கான ரயில்வே டிக்கெட் முன்பதிவு – செப்.12 முதல் தொடக்கம்!

0
தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கான ரயில்வே டிக்கெட் முன்பதிவு - செப்.12 முதல் தொடக்கம்!
தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கான ரயில்வே டிக்கெட் முன்பதிவு - செப்.12 முதல் தொடக்கம்!
தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கான ரயில்வே டிக்கெட் முன்பதிவு – செப்.12 முதல் தொடக்கம்!

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை மக்களால் விமர்சையாக கொண்டாடப்படும். அதனால் வெளி ஊர்களில் இருந்து சொந்த ஊருக்கு வரும் மக்கள் நாளை மறுநாள் (செப். 12) முதல் ரயில்களில் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் டிக்கெட் முன்பதிவு:

தமிழக மக்களின் பாரம்பரிய பண்டிகையாக பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 14 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. அதனால் தொடர்ந்து 3 நாட்களுக்கு பள்ளி கல்லூரிகள் அரசு அலுவலகங்கள் விடுமுறை விடப்படும். மக்கள் தங்களது வீடுகளில் பொங்கல் வைத்து சூரிய பகவானிற்கு படைத்து மகிழ்ச்சியாக பொங்கல் பண்டிகையை கொண்டாடுவார்கள். மேலும் ஏழை எளிய மக்களும் பொங்கல் பண்டிகை கொண்டாடும் வகையில் அரசு பொங்கல் பரிசு மற்றும் ரொக்கத் தொகை வழங்கும்.

இந்நிலையில் தொடர் விடுமுறை காரணமாக சென்னை உள்ளிட்ட நகரங்களில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் தங்களது சொந்த ஊருக்கு கிளம்புவார்கள். அதற்காக முன்பதிவு செய்தால் மட்டுமே ரயில்களில் டிக்கெட் கிடைக்கும். எனவே பொங்கல் பண்டிகைக்காக ரயில்களில் முன்பதிவு நாளை மறுநாள் (செப். 12) முதல் தொடங்கப்பட இருப்பதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஜனவரி 10 ஆம் தேதி ரயில் பயணம் செய்ய விரும்புபவர்கள் ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் வாயிலாகவும், டிக்கெட் முன்பதிவு மையங்களிலும் தங்களுக்கான டிக்கெடுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக ரேஷன் கடை பெண் ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அரசாணை வெளியீடு!

Exams Daily Mobile App Download

இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ரயில்வேயில் 120 நாட்களுக்கு முன் டிக்கெட் எடுத்து கொள்ளும் வசதி இருக்கிறது. அதனால் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளி ஊர் செல்ல திட்டமிடுபவர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக தீபாவளி, பொங்கல் பண்டிகையின்போது, முன்பதிவு துவங்கிய அடுத்த சில நிமிடங்களில் டிக்கெட் விற்று தீர்ந்து விடும். அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கும் நிலையில் முன்பதிவு முடிவு காத்திருப்பு பட்டியல் அதிகரித்து கொண்டே இருக்கிறது. அதனால் தேவையான வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்குவது, கூடுதல் பெட்டிகள் இணைப்பு போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!