தமிழகத்தில் விமான நிலைய தரத்திற்கு உயர போகும் 9 ரயில் நிலையங்கள் – ரயில்வே பொது மேலாளர் விளக்கம்!
தமிழகத்தில் உள்ள முக்கியமான 9 ரயில் நிலையங்கள் விமான நிலையங்களுக்கு நிகராக மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார்.
முக்கிய அறிவிப்பு
நாட்டின் 74வது குடியரசு தினவிழா நேற்று (ஜன 27) கோலாகலமாக நடைபெற்றது. அதில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் பேசுகையில், தமிழகத்தில் சென்னை எழும்பூர், காட்பாடி, புதுச்சேரி, மதுரை, ராமேசுவரம், கன்னியாகுமரி, எர்ணாகுளம் சந்திப்பு, கொல்லம், எர்ணாகுளம் ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ரயில் நிலையங்களை , விமான நிலையங்களின் தரத்துக்கு இணையாக மறுசீரமைப்பு செய்யப்பட இருப்பதாக அவர் தெரிவித்தார்.
மின் நுகர்வோர் கவனத்திற்கு – ஆதார் எண் இணைப்புக்கான கால அவகாசம் முடிவு!!
Telegram Updates for Latest Jobs & News – Join Now
மேலும் நடப்பு நிதியாண்டில் தெற்கு ரயில்வே அனைத்துத் துறைகளிலும் ஆரோக்கியமான வளர்ச்சியைப் பெற்றுள்ளது என அவர் தெரிவித்தார், மேலும் இந்த நிதியாண்டில் மொத்த வருவாய் வளர்ச்சி அதிகரித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்திய ரயில்கள் மின்மயமாக்குதல் குறித்த பணிகள் 188 கி.மீ. தொலைவுக்கு முடிவடைந்துள்ளது என அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.