அரசு ஊழியர்கள் இனி ‘இந்த’ ரயிலிலும் பாஸ் பயன்படுத்தி பயணிக்கலாம் – ரயில்வே வாரியம் அறிவிப்பு!!
ரயில்வே துறையில் பணியாற்றும் ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் என அனைவரும் ரயில்களில் தங்களின் பாஸ் பயன்படுத்தி பயணம் மேற்கொள்ளலாம். ஆனால் வந்தே பாரத் ரயில்களில் மட்டும் இத்தகைய சலுகை இல்லாமல் இருந்தது. தற்போது இது தொடர்பாக ரயில்வே வாரியம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
வந்தே பாரத்
இந்தியாவில் பொது போக்குவரத்துகளில் ஒன்றான ரயில்வேயில் லட்சக்கணக்கான மக்கள் நாள்தோறும் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ரயில்வே துறையில் அவ்வப்போது புதுப்புது திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தி வருகிறது. இதில் குறிப்பாக கடந்த 2019ம் ஆண்டு நாட்டின் 75 நகரங்களை இணைக்கும் வந்தே பாரத் அதிவிரைவு ரயில் சேவை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
Follow our Instagram for more Latest Updates
இத்திட்டத்தின் கீழ் இதுவரை ஐந்து இடங்களில் வந்தே பாரத் ரயில் சேவை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரயில்வே வாரியம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில், ரயில்வே துறையில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் என அனைவரும் தங்களின் பாஸ் பயன்படுத்தி பயணிக்க ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் சில பிரிவு பணியாளர்கள் முன்பதிவு செய்யப்பட்ட வகுப்பில் மட்டுமே பயணிக்க முடியும்.
தமிழக ரேஷன் கடைகளில் 6,503 பணியிடங்கள் – நேர்காணல் அழைப்பு கடிதம் வெளியீடு!
இதேபோன்று அலுவலர்கள் அதிகாரிகள் சதாப்தி, ராஜஸ்தானி ரயில்களில் ஏசி பெட்டிகளில் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் வந்தே பாரத் ரயில்களில் இத்தகைய சலுகை அனுமதிக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் தற்போது அனைத்து வந்தே பாரத் ரயில்களிலும் ரயில்வே துறையில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் தங்களின் பாஸ்களை பயன்படுத்தி பயணம் மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.