ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு – 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்! முழு விபரங்கள் இதோ!
இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்புகளை அரசு வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து தென் கிழக்கு மத்திய ரயில்வே துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வேலைவாய்ப்பு
இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக இளைஞர்கள் பல்வேறு வேலைவாய்ப்புகளை இழந்துள்ளனர். தற்போது தொற்று பரவல் குறைந்ததால் பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தென் கிழக்கு மத்திய ரயில்வே துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் SECR-ன் 2/3, 4 மற்றும் 5 நிலைகளுக்கு மொத்தமாக 21 விளையாட்டு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடத்தப்படுகிறது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
ஏப்ரல் 11 முதல் 25 வரை விமானநிலையம் மூடல் – சுற்றுலாத்துறையின் கோரிக்கை!
இதில் தகுதியான நபர்கள் தேர்வு விளையாட்டுத் திறன், உடல் தகுதி மற்றும் பயிற்சியாளரின் கண்காணிப்பு, நெறிமுறைகளின்படி அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு சாதனைகளின் மதிப்பீடு மற்றும் கல்வித் தகுதி உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இப்பணியில் சேருபவர்களுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரைகளின் படி ஊதியம் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க secr.indianrailways.gov.in என்ற இணையதள முகவரிக்கு செல்ல வேண்டும். இதில் ஆட்சேர்ப்பு என்பதை கிளிக் செய்து RRC பிலாஸ்பூருக்கான இணைப்பை கிளிக் செய்ய வேண்டும்.
இதில் ஸ்போர்ட்ஸ் கோட்டா என்பதை தேர்ந்தெடுத்து SECR விண்ணப்பத்தை சரியாக பூர்த்தி செய்ய வேண்டும். இதில் ஒரே விளையாட்டு துறையில் ஒன்றுக்கு மேற்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியாது. அதன்பின் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு தேர்வுக்கட்டணமாக விண்ணப்பத்தார்கள் ரூ.500ஐ செலுத்த வேண்டும். ஆனால் SC/ST பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ. 250 மட்டும் செலுத்த வேண்டும்.
பதவி: நிலை 4 மற்றும் 5
கல்வித்தகுதி: விளையாட்டு சாதனைகளுடன், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.
பதவி: லெவல் 2/3
கல்வித்தகுதி: தொழில்நுட்பம் அல்லாத பணியிடத்துக்கு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
தொழில்நுட்ப பணியிடத்துக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும் மற்றும் ஐடிஐ சான்றிதழ் பெற்றவராகவும் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 5