2023-2024 ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு ரூ.1.9 லட்சம் கோடி ஒதுக்கீடு – வெளியான சூப்பர் தகவல்!!
2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த பட்ஜெட்டில் கொரோனா பரவல், பணவீக்கம் ஆகியவற்றின் காரணமாக பல்வேறு சலுகைகள் வழங்கப்பட உள்ளது. தற்போது ரயில்வே துறைக்கான என்னென்ன அறிவிப்புகள் இடம்பெறும் என்று பார்ப்போம்.
ரயில்வே துறை
நாட்டில் 2023 – 2024ம் ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிக்கும் பணிகளை மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதன்படி இந்த பட்ஜெட் தயாரிக்கும் பணிகள் முடிவடைந்து வருகிற பிப்ரவரி 1ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட்டில் தற்போது ரயில்வே துறைக்கான அறிவிப்புகள் என்னென்ன இடம்பெறும் என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.
தனியார் வங்கியில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!
இந்த பட்ஜெட்டில், ரயில்வே துறைக்கு சுமார் 1.9 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இதன் மூலமாக நவீன வசதிகளுடன் கூடிய 58000 புதிய ரயில் பெட்டிகளை தயார் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அத்துடன் ஜீரோ கார்பன் எமிசன் திட்டத்தின் கீழ் வருகிற 2030 ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் இருக்கும் அனைத்து ரயல்பாதைகளும் மின்மயமாக்கும் பணிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இதுமட்டுமல்லாமல், இந்தியாவில் ரயில் சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக புதிய 100 விஸ்டாடோம் கோச்சுகளை உருவாக்க உள்ளதாக மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அறிவிப்புகளை பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பார் என கூறப்படுகிறது.