தமிழகத்திலிருந்து அகமதாபாத்துக்கு சிறப்பு கட்டண ரயில் தொடக்கம் – ரயில்வே துறை வெளியிட்ட அறிவிப்பு!!
இந்திய ரயில்வே துறையில் பயணிகளின் வசதிக்கேற்ப பல்வேறு வகையான திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சியில் இருந்து சென்னை எழும்பூர் வழியாக அகமதாபாத்துக்கு சிறப்பு கட்டண ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சிறப்பு கட்டண ரயில்
பொதுவாக நீண்ட தூர பயணத்திற்கு பொதுப்போக்குவரத்துகளில் ஒன்றான ரயில் போக்குவரத்தையே மக்கள் அதிகம் விரும்புகின்றனர். ஏனெனில் ரயில் கட்டணம் குறைவாகவும் அத்துடன் தூங்குவதற்கு செளகரியமாகவும் இருப்பதால் இதில் நாள்தோறும் லட்சக்கணக்கானோர் பயணம் மேற்கொள்கின்றனர். மேலும் இரயில்வே துறையானது பயணிகளின் வசதிக்கேற்ப பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
Exams Daily Mobile App Download
அந்த வகையில் தற்போது, திருச்சியில் இருந்து, சென்னை எழும்பூர் வழியாக குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி அகமதாபாத்தில் இருந்து டிசம்பர் 22, 29ம் தேதி ஆகிய நாட்களிலும், அடுத்த ஆண்டு ஜனவரி 5, 12, 19, 26ம் தேதி ஆகிய நாட்களிலும் காலை 9:30 மணிக்கு திருச்சியை வந்தடையும்.
One Station One Product: பின்தங்கிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மத்திய அரசின் புதிய திட்டம்!
Follow our Instagram for more Latest Updates
அதன்பின்பு, திருச்சியில் இருந்து டிசம்பர் 25ம் தேதி மற்றும் அடுத்த ஆண்டு ஜனவரி 1, 8, 15, 22, 29ம் தேதிகளில் அதிகாலை 5:45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 9:15 மணிக்கு அகமதாபாத்திற்கு சிறப்பு கட்டண ரயில் சென்றடையும். இந்த சிறப்பு கட்டண ரயில் டிக்கெட்டிற்கான முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்கியுள்ளது. இந்த சிறப்பு கட்டண ரயில் பெரம்பூர், அரக்கோணம், செங்கல்பட்டு, சென்னை எழும்பூர், கடலுார், விழுப்புரம், தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.