இனி ரேஷன் கடைகளில் கோதுமைக்கு பதில் ராகி? தகவல் வெளியீடு!
இந்தியாவில் ரேஷன் கடைகள் மூலம் மக்கள் மலிவு விலையில் வீட்டு உபயோக பொருட்கள் பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கேரளாவில் ரேஷன் கடைகள் மூலம் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு சத்தான உணவு பொருட்களை வழங்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
ரேஷன் கடை:
இந்தியாவில் பொது விநியோக திட்டத்தின் கீழ் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது. இதன் மூலம் மக்கள் மாதந்தோறும் மலிவான விலையில் அத்தியாவசியப் பொருட்களை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த வருடம் நிலவிய கொரோனா பேரிடருக்கு மத்தியில் மத்திய மற்றும் மாநில அரசுகள் இலவசமாகவும், கூடுதலாகவும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு உணவு பொருட்களை வழங்கி வந்தனர். இதனால் ஊரடங்கு காலத்தில் மக்கள் உணவு பற்றாக்குறை இன்றி வாழ்ந்தனர். அதனை தொடர்ந்து ஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு திட்டமும் கொண்டு வரப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் கேரளாவில் உள்ள ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வரும் உணவு பொருட்களில் சில மாற்றங்களை செய்ய அரசு முடிவு செய்துள்ளது. அம்மாநிலத்தில் இயல்பாக மழை பொழிவு அதிகமாக இருக்கும். இந்த நேரத்தில் குரங்கு அம்மை நோய் தொற்று தீவிரம் எடுத்து பரவி வருகிறது. இதுவரை கேரளாவில் 2 பேருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அம்மாநில சுகாதாரத்துறை தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கேரள மாநிலத்தின் மலையோர மாவட்டங்களில் சுகாதாரத்துறை குழுவினர் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழகத்தில் OLA & Uber வாகனங்கள் அரசின் கீழ் இயக்கம்? அமைச்சர் தகவல்
அப்போது அங்குள்ள மலையோர மக்களுக்கு ரத்தசோகை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனை குணப்படுத்த மக்கள் சத்தான உணவு பொருட்களை உண்ண வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ராகி, பருப்பு மற்றும் கொண்டை கடலை வகை உணவுகளை உண்ண சுகாதாரத்துறை குழுவினர் பரிந்துரை செய்துள்ளனர். அதனால் கேரளாவில் மலையோர கிராம மக்களுக்கு ரேஷன் கடைகள் வாயிலாக ராகி, பருப்பு மற்றும் கொண்டைக்கடலை போன்ற உணவு பொருட்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அனுமதி அளிக்க கோரி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.