ராதிகாவை துபாய்க்கு போக சொல்லி வற்புறுத்தும் அம்மா – ப்ரோமோ ரிலீஸ்!
இத்தனை நாட்களாக துபாய்க்கு செல்லவேண்டாம் என ராதிகாவிடம் கெஞ்சி கொண்டிருந்த அம்மாவும், அண்ணனும் தற்போது துபாய்க்கு போக சொல்லி வற்புறுத்தும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதனால் கதை அடுத்த கட்டத்திற்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாக்கியலட்சுமி சீரியல்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் கோபியை ராதிகா ஏற்றுக்கொள்வாரா என சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அதாவது, கோபிக்கு எப்படியும் பாக்கியா விவாகரத்து கொடுக்கமாட்டார் என எதிர்பார்த்த நேரத்தில் பிடிக்காதவருடன் எதற்காக வாழ வேண்டும் என நினைத்து துணிச்சலாக பாக்கியா விவாகரத்து வேண்டும் என கேட்டார். இது தான் நல்ல சந்தர்ப்பம் என நினைத்து கோபியும் பாக்கியாவிற்கு விவாகரத்து கொடுத்து விட்டார்.
EPFO கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – UAN எண்ணை உருவாக்குவது எப்படி?
ஆனால், பாக்கியா கோபியிடம் இவ்வளவு துணிச்சலாக சவால்விடுவது கோபிக்கு சுத்தமாக பிடிக்கவே இல்லை. என்னை பிடிக்காததால் தானே நான் கேட்டவுடன் விவாகரத்து கொடுத்துவிட்டாய் என பாக்கியாவிடம் கோபி மல்லுக்கட்டி கொண்டிருக்கிறார். இருந்தாலும், மற்றொரு பக்கத்தில் ராதிகா நம்மை ஏற்றுக்கொள்ள வேண்டும் என பயத்தில் நடுங்கி கொண்டிருக்கிறார். இது ஒரு புறம் இருக்க மறுபுறம் என்ன செய்வதென்று தெரியாமல் ராதிகாவும் சிந்தித்தபடியே இருக்கிறார்.
Exams Daily Mobile App Download
அதாவது, கோபியை விட்டு துபாய்க்கு செல்லலாமா என தொடர்ந்து யோசித்துக்கொண்டே இருக்கிறார். இந்த நேரத்தில் ராதிகாவின் அம்மாவும், அண்ணனும் ராதிகாவிடம் வந்து துபாய்க்கு போகிறதை பற்றி பேசுகிறார்கள். ஆனால், ராதிகா துபாய்க்கு செல்வதில் உறுதியாக இல்லை என்பதை அறிந்துகொண்டு கண்டிப்பாக நீ மயூவின் வாழ்க்கைக்காகவாது துபாய் செல்ல வேண்டும் என சொல்கின்றனர். இத்தனை நாட்கள் கோபியை திருமணம் செய்துகொள், துபாய் செல்ல வேண்டாம் என கூறிய அம்மாவும், அண்ணனும் தற்போது அப்படியே மாற்றி பேசுகின்றனர். இதற்கு பிறகு ராதிகாவின் முடிவு என்னவாக இருக்கும் என சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.