பிறந்தநாள் விழாவில் கோபியை பார்த்த ராதிகா, மாட்டிக் கொண்ட கோபி – “பாக்கியலட்சுமி” சீரியலில் இனி வருபவை!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் தாத்தாவின் பிறந்தநாள் விழாவிற்கு குடும்பமே ஏற்பாடு செய்கின்றனர். இந்நிலையில் பாக்கியா ராதிகாவை அழைக்க முடிவு செய்ய அந்த விழாவில் பாக்கியாவுடன் கோபி இருப்பதை ராதிகா பார்த்துவிடுகிறார்.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியல் இல்லதரிசியின் கதையை மையமாக வைத்தே ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் கோபி பாக்கியாவையும், ராதிகாவையும் ஒரே நேரத்தில் ஏமாற்றி வருகிறார். கோபியின் உண்மையான முகம் இருவரில் ஒருவருக்கு தெரிந்தால் கூட பல பிரச்சனை ஏற்படும். அதனால் கோபி இருவரிடமும் சிக்காமல் தப்பித்து வருகிறார். இந்நிலையில் தாத்தாவின் 75 வது பிறந்தநாளை முன்னிட்டு சொந்தங்களை அழைத்து நிகழ்ச்சி நடத்த வேண்டும் என பாக்கியா ஆசைப்படுகிறார்.
Exams Daily Mobile App Download
அதனால் ஏற்பாடுகளை செய்ய பாக்கியா ராதிகாவை அழைக்க வேண்டும் என நினைக்கிறார். ஆனால் கோபி வேண்டாம் என சொல்ல ஆனால் ராதிகா பிடிவாதமாக இருக்கிறார். இந்நிலையில் கோபிக்கு தெரியாமல் பாக்கியா ராதிகாவை அழைக்கிறார். ராதிகாவும் வீட்டிற்கு வர முடிவு செய்கிறார். இனி வரும் எபிசோடுகளில் கோபியிடம் சொல்லாமல் ராதிகா பாக்கியாவின் வீட்டிற்கு வருகிறார். அப்போது அங்கே குடும்பத்துடன் கோபி இருப்பதை பார்த்து ராதிகா அதிர்ச்சி அடைகிறார்.
“பாரதி கண்ணம்மா” சீரியலில் இருந்து நான் விலகுகிறேனா? அருண் பிரசாத் சொன்ன விளக்கம்!
மாட்டிக் கொண்டோமே என நினைத்து கோபி சமாளித்தாலும் ராதிகாவுக்கு சந்தேகம் வருகிறது. அதனால் ராதிகா கோபியிடம் இது பற்றி கேட்க கோபி வசமாக மாட்டிக் கொள்கிறார். உண்மையை தெரிந்தும் ராதிகா கோபியை ஏற்றுக் கொள்வாரா என்பது எல்லாம் இனி வரப் போகும் எபிசோடுகளில் காட்டப்பட இருக்கிறது. மேலும் இன்றைய எபிசோடில் பாக்கியா கோபி போனில் அடிக்கடி பேச அதனால் சந்தேகத்துடன் இருக்கிறார். கோபி சிக்கினால் தான் இனி வரும் எபிசோடுகளில் சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.