பாக்கியா வீட்டு நிகழ்ச்சிக்கு அழைக்கும் ராதிகா, கோவப்பட்ட கோபி – “மகா சங்கமம்” சீரியலில் இனி வருபவை!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் நட்சத்திரங்கள் இணைந்து மகா சங்கமம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாக்கியா, தாத்தாவின் பிறந்தநாளுக்கு ராதிகாவை அழைக்க, கோபியை உடன் வர சொல்கிறார். ஆனால் கோபி வரமாட்டேன் என சொல்ல ராதிகா பயங்கரமாக கோவப்படுகிறார்.
மகா சங்கமம் :
சின்னத்திரையில் டாப் சீரியல்களான பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது மகா சங்கமம் நடத்தப்பட்டு வருகிறது. தாத்தாவின் பிறந்தநாளுக்காக பாண்டியன்ஸ் ஸ்டோர்ஸ் கதாபாத்திரங்கள் சென்னைக்கு வந்திருக்கின்றனர். சொந்தங்களை பார்த்த சந்தோஷத்தில் ராமமூர்த்தி இருக்கிறார். ஆனால் வீட்டில் நிறைய பேர் இருப்பதால் கோபிக்கு பிடிக்காமல் இருக்கிறது. இந்நிலையில் பாக்கியாவும் தனமும் இன்னும் சிலரை அழைக்க செல்கின்றனர்.
Exams Daily Mobile App Download
அதில் முதலாவதாக ராதிகாவை அழைக்கின்றனர். தாத்தாவின் 75வது பிறந்தநாள் விழா இருக்கிறது. நீங்க கண்டிப்பாக வர வேண்டும் மயூரா மற்றும் நீங்க திருமணம் செய்ய இருப்பவரை அழைத்து கொண்டு வர வேண்டும் என சொல்கிறார். ராதிகா கண்டிப்பாக வருகிறேன் என சொல்கிறார். பின் கோபி வீட்டிற்கு வர டீச்சர் வீட்டில் விசேஷம் கண்டிப்பாக நீங்களும் வர வேண்டும் என ராதிகா சொல்கிறார். ஆனால் கோபி நான் வரமாட்டேன் எனக்கு இதெல்லாம் பிடிக்காது என சொல்லி சமாளிக்கிறார்.
‘குக் வித் கோமாளி 3’ ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இவர் தான் இந்த வார சிறப்பு விருந்தினரா?
ஆனால் ராதிகா, பாக்கியா வீட்டு நிகழ்ச்சிக்கு நீங்க கண்டிப்பாக வர வேண்டும் இல்லையென்றால் நான் உங்களிடம் பேச மாட்டேன் என சொல்கிறார். அதை கேட்டு கோபிக்கு கோவம் வருகிறது. ஆனால் ராதிகா கண்டிப்பாக வர வேண்டும் என பிடிவாதமாக இருக்கிறார். கோபி நிகழ்ச்சிக்கு வந்தால் கண்டிப்பாக மாட்டிக் கொள்வார் என்பதால் அடுத்து வரும் எபிசோடுகளில் என்ன நடக்க இருக்கிறது என பொறுத்திருந்து பார்க்கலாம்.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்