நீ ஒன்னும் என் கல்யாணத்துல சமைக்க வேணாம்.. பாக்கியாவுக்கு மொத்தமாக வில்லியாக மாறிய ராதிகா!
பாக்கியலட்சுமி தொடரில் ராதிகா, கோபியின் திருமண வேலைகள் படு ஜோராக நடந்து கொண்டிருக்கிறது. மறுபுறம் பாக்கியா கோபி திருமணம் என்று தெரியாமல் தனக்கு கிடைத்த சமையல் கான்ட்ராக்ட் ஆர்டரை ஒழுங்காக செய்யவேண்டும் என்ற பதற்றத்தில் இருக்கிறார்.
பாக்கியலட்சுமி:
ராதிகா மீது உள்ள பித்தால் கோபி, பாக்கியாவை முழுவதுமாக கைகழுவி விட்டார். மேலும் தன் சுயமரியாதைக்கு இழுக்கு வராமல் இருக்க பாக்கியா தானாகவே முன்வந்து கோபியை விவாகரத்தும் செய்துவிட்டார். இதுதான் சாக்கு என்று தற்போது ராதிகா வீட்டில் தங்கி இருக்கிறார் கோபி. ராதிகாவின் அம்மா, அண்ணன் உள்பட அனைவரும் கோபி ராதிகா திருமண வேலைகளை அதிரடியாக செய்து வருகின்றனர்.
மேலும் திருமணத்தில் எல்லாம் நன்றாக இருக்கவேண்டும் என சமையல் கான்ட்ராக்ட் ஒன்றை மிகப்பெரிய நிறுவனம் மூலம் சந்துரு வழங்கியுள்ளார். அது வேறு யாருக்கும் இல்லை.. பாக்கியாவிற்கு தான்.. மேலும் இது கோபியின் திருமணம் என்று தெரிந்த பின்பும் சுய கௌரவத்திற்காக இந்த திருமணத்தில் சமைக்க ஒப்புக்கொள்கிறார். ஆனால் இது பற்றி ராதிகாவுக்கு எதுவும் தெரியாது. ஏற்கனவே தற்போது ராதிகா சற்று சுயநிலமாக யோசித்து வருகிறார்.
பிக்பாஸ் சீசன் 6ல் களமிறங்கும் பிரபல சின்னத்திரை நடிகை – குஷியில் ரசிகர்கள்! வைரலாகும் தகவல்!
Exams Daily Mobile App Download
கோபி தன் அம்மாவை பற்றி பேசும் பொழுது கூட ராதிகா யோசிக்கிறார். அப்படி இருக்கையில் கோபியின் முன்னாள் மனைவி பாக்கியா தன் திருமணத்தில் சமைக்க கட்டாயம் ராதிகா விட மாட்டார். கண்டிப்பாக பிரச்சனை செய்வார். இந்த பிரச்சனைகளை எவ்வாறு பாக்கியா எதிர்கொள்ளப்போகிறார் என இனிவரும் எபிசோடுகளில் காணலாம்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்