ராதிகாவை கண்டபடி திட்டிய செழியன், கண்கலங்கிய ராதிகா – “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்து வருபவை!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா கோபியை விவாகரத்து செய்த நிலையில், கோபி பாக்கியா மீது பயங்கர கோவத்தில் இருக்கிறார். இந்நிலையில் குடும்பத்தினர் பாக்கியாவின் முடிவு பிடிக்காமல் கஷ்டத்தில் இருக்க, இன்றைய எபிசோடில் செழியன் ராதிகாவை கண்டபடி திட்டுகிறார்.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியல் இல்லத்தரசிகளின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் நிலையில், இந்த சீரியலில் பல திருப்பங்கள் சில வாரங்களாக காட்டப்பட்டு வருகிறது. கோபி இத்தனை நாட்களாக குடும்பத்தையும் பாக்கியாவையும் ஏமாற்றி கொண்டிருக்க, ராதிகாவை திருமணம் செய்ய வேண்டும் என்ற முடிவுடன் பாக்கியாவை விவாகரத்து செய்ய நினைக்கிறார். ஆனால் பாக்கியாவிற்கு இந்த விவரம் தெரியாமல் இருக்கிறது.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் கோபி, ராதிகாவை திருமணம் செய்ய இருப்பதும், பாக்கியாவை விவாகரத்து செய்ய இருப்பதும் பாக்கியாவிற்கு தெரிய வர, அதனால் பாக்கியா குடும்பத்தினரிடம் எல்லா உண்மையையும் சொல்கிறார். மேலும் கோபி உடன் இனிமேல் வாழ முடியாது என்ற முடிவிற்கு வருகிறார். அவரே கோர்ட்டிற்கு சென்று விவாகரத்து வேண்டும் என சொல்ல, கோபி பாக்கியாவிற்கு எவ்வளவு திமிரு என நினைத்து கோபப்படுகிறார். குடும்பத்திற்கும் பாக்கியாவின் இந்த முடிவு பிடிக்காமல் இருக்க, இனிமேல் பாக்கியா இந்த வீட்டிற்குள் வர கூடாது என கோபி சொல்கிறார்.
ஜீவா ஜனார்த்தனன் கடையை பார்க்க திட்டமிடும் மீனா, தனத்திற்கு உதவி செய்த கதிர் – இன்றைய எபிசோட்
இனியா அம்மாவை நினைத்து வருத்தப்பட்டு அழுது கொண்டிருக்க, கோபி இனிமேல் அம்மா வரமாட்டார் நான் உனக்கு அம்மாவாக இருக்கிறேன் என சொல்கிறார். ஆனாலும் இனியா சமாதானம் ஆகவில்லை. இந்நிலையில் ராதிகா ஜெனிக்கு போன் செய்து பாக்கியா பற்றி கேட்க கோவப்பட்ட ஜெனி உங்களால் தான் எல்லாம் என சொல்கிறார். மேலும் பதிலுக்கு செழியனும் போன் செய்து இனிமேல் இப்படி போன் செய்யாதீங்க என திட்டிவிட்டு போனை வைக்கிறார். செழியன் திட்டியதை நினைத்து ராதிகா வருத்தப்பட்டு கண் கலங்குகிறார்.