கோபி பற்றி தெரிந்த பின் ராதிகா எடுக்கும் திடீர் முடிவு – “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்து வருபவை!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபியின் குடும்பத்தை பற்றி ராதிகாவுக்கு உண்மை எல்லாம் தெரிந்துவிட்டது. இந்நிலையில் அடுத்து ராதிகா என்ன முடிவு செய்வார் என்பது பற்றிய பெரிய திருப்பம் குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில் கதைக்களம் அடுத்தக் கட்டத்திற்கு சென்று விட்டது. பாக்கியா தான் கோபியின் மனைவி என்ற உண்மை தெரிந்த பின்னர் ராதிகா கோபியை விட்டு விலக முடிவு செய்கிறார். அதனால் கோபி மிகுந்த மன வருத்தத்தில் இருக்கிறார். பாக்கியாவிற்கு கோபி மீது இருந்த சந்தேகம் தற்போது உறுதியாகி இருக்கிறது. அவருக்கு வேறு பெண்ணுடன் பழக்கம் இருப்பதை தெரிந்து கொண்டு பாக்கியா எதுவும் பேசாமல் இருக்கிறார்.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் ராதிகா அடுத்து என்ன முடிவு செய்வார் என்பது எல்லாம் இனி வரும் எபிசோடுகளில் காட்டப்பட இருக்கிறது. அதாவது மயூராவிற்காக ராதிகா சேர்வார் என்றால் தன்னுடைய நெருக்கமான தோழிக்கு துரோகம் செய்வது போல ஆகிவிடும் என்பதால் ராதிகா கோபியை ஏற்றுக் கொள்ளமாட்டார் என்பது தெரிகிறது, இதற்கிடையே கோபி பாக்கியாவை விவாகரத்து செய்ய முடிவு செய்து இருக்கிறார். அதற்காக ஏற்பாடுகள் எல்லாம் நடந்து விட்டது.
விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அடுத்த ட்விஸ்ட் – எழிலை சந்திக்கும் அமிர்தா!
ராதிகாவுக்கு கோபி எப்படி விவாகரத்து வாங்குவார் என்ற சந்தேகம் இருக்கிறது. அதனால் அதை வைத்து தான் அடுத்தக் கட்ட கதை நகர்ந்து செல்ல இருக்கிறது. கோபி விவாகரத்து வாங்கி விடுவாரா இல்லை இனி ராதிகாவை பிரிந்துவிடுவாரா என்பது எல்லாம் இனி வரும் எபிசோடுகளில் காட்டப்பட இருக்கிறது. மேலும் பாக்கியா கோபி விவாகரத்து வாங்க இருப்பது தெரிந்தால் எப்படி ஏற்றுக் கொள்வார். குடும்பம் அதை எப்படி ஏற்றுக் கொள்ளும் என்பது எல்லாம் இனி கதையில் பெரிய திருப்பமாக இருக்கிறது.