என்ன திமிரு உனக்கு.. கோபி மயூவோட அப்பா.. இனியா கன்னத்தில் பளார் என அறைந்த ராதிகா!

0
என்ன திமிரு உனக்கு.. கோபி மயூவோட அப்பா.. இனியா கன்னத்தில் பளார் என அறைந்த ராதிகா!
என்ன திமிரு உனக்கு.. கோபி மயூவோட அப்பா.. இனியா கன்னத்தில் பளார் என அறைந்த ராதிகா!
என்ன திமிரு உனக்கு.. கோபி மயூவோட அப்பா.. இனியா கன்னத்தில் பளார் என அறைந்த ராதிகா!

பாக்கியலட்சுமி சீரியலில் கோபியின் திருமணத்தை நிறுத்த தாத்தா எவ்வளவோ முயற்சி செய்தும் அது நிறைவேறாததால், வீட்டில் சென்று அனைவரிடமும் இது குறித்து கூறுகிறார். இதனால், பல எதிர்பாராத நிகழ்வுகள் நடந்து விடுகிறது.

பாக்கியலட்சுமி சீரியல்:

விஜய் டிவியின் முக்கிய சீரியலாக தற்போது ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்தடுத்து விறுவிறுப்பாக காட்சிகள் வருகிறது. கோபிக்கு ராதிகாவுடன் திருமணம் என்பதை அறிந்து கொண்டு ராமமூர்த்தி தாத்தா கோபியை சந்தித்து எவ்வளவோ கெஞ்சி பார்க்கிறார். ஆனால், கோபி கட்டாயம் தான் ராதிகாவை திருமணம் செய்து கொள்வதை யாராலும் தடுக்க முடியாது என்று கூறிவிடுகிறார். தாத்தாவிற்கு அடுத்த அதிர்ச்சியாக, பாக்கியா தான் கோபியின் திருமணத்தில் சமைக்கிறார் என்று தெரிகிறது.

BSNL வெளியிட்ட அடுத்தடுத்த குட் நியூஸ் – மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

இதனால் பாக்கியாவிடம் விஷயத்தை சொல்லி, வந்து விடு பாக்கியா நாம இனி இங்கே இருக்க கூடாது என்று சொல்லுகிறார். ஆனால், நம்மை பிடிக்கவில்லை என்று சொன்னவரை நாம, இனி கட்டாயப்படுத்தி கூட்டி வர கூடாது என்றும், தன்னை நம்பி வந்த ஆர்டரை தான் சிறப்பாக செய்து முடிக்க வேண்டும் என்றும் சொல்லி விடுகிறார். இதனால் தாத்தா வேறு வழியில்லாமல் வீட்டில் வந்து அனைவரிடமும் கோபியின் திருமண விஷயத்தை பற்றி சொல்லுகிறார். இதனால் ஈஸ்வரி பாட்டி, நான் சொன்னால் கோபி கேட்பான் என்று வேகமாக கிளம்புகிறார்.

Exams Daily Mobile App Download

உடனே, இனியாவும் பாட்டியுடன் வருகிறார். மண்டபத்தில் ஈஸ்வரியும், இனியாவும் வந்து நிறுத்துங்க என்று சத்தம் போடுகின்றனர். இதனால் ராதிகா எங்கே தன்னை இதனை பேர் முன்னால் அசிங்கப்படுத்தி விடுவார்களோ என்று பயந்து, மனமேடையை விட்டு எழுந்து வந்து எதுக்கு இப்படி தனி தனியா ஒரு ஒருத்தரா வந்து பிரச்சனை பண்றீங்க? எல்லாரும் மொத்தமா வர வரவேண்டியது தான? என்று கேட்கிறார்.

இதனால், இனியா எங்க அப்பா தான் உங்களுக்கு கிடைச்சாரா? வேற ஆளே உங்களுக்கு கிடைக்கலையா? அதான் உங்க முதல் கணவர் மயூவோட அப்பா இருக்காரே? அப்புறம் ஏன் என் அப்பாவை புடிச்சு வைச்சுக்கிட்டிங்க என்று கேட்டதும், ராதிகாவிற்கு கோவம் வந்து விடுகிறது. இதனால், ராதிகா இனியாவை கன்னத்தில் ஓங்கி அடித்து விடுகிறார். பின்னர், கோபி தான் இனி மயூவோட அப்பா என்று சொல்லி விடுகிறார். இதை கேட்டு இனியா, ஈஸ்வரி அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!