இனியாவை கோவத்தில் அறைந்த ராதிகா, அதிர்ச்சியடையும் பாக்கியா – அடுத்து நடக்க போவது என்ன?
ராதிகாவால் தான் குடும்பத்தில் இவ்வளவு பெரிய பிரச்சனை என இனியா ராதிகாவுடன் சண்டை போடுகிறார். இதனால், கடுப்பான ராதிகா இனியாவை அறைந்து விடுகிறார். இதனை பார்த்த பாக்கியா ராதிகாவுடன் சண்டை போடும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி சீரியல்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் கோபிக்கு பாக்கியா விவாகரத்து கொடுத்து விட்டார். எப்படியும் கோபியை விட்டு பாக்கியா விலக மாட்டார் என எதிர்பார்த்த நேரத்தில் பிடிக்காதவருடன் ஒரு நிமிடம் கூட வாழவே முடியாது என பாக்கியா விவாகரத்து கொடுத்து விட்டார். பாக்கியாவின் செய்கையை பார்த்து கோபியே அதிர்ந்து போயிருக்கிறார். இதற்கு இடையே, கோபியும் பாக்கியாவும் விவாகரத்து செய்துவிட்டத்தை குடும்பத்தினர்கள் யாராலும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
தமிழகத்தில் நாளை (ஆகஸ்ட் 12) மின்தடை ஏற்பட உள்ளபகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
அதிலும், இனியா ராதிகாவால் தான் நம் குடும்பத்திற்கு இவ்வளவு பெரிய பிரச்சனை என ராதிகா மீது கொலை வெறியில் இருக்கிறார். இதற்கு மேலும் பொறுமையாக இருக்க முடியாது என நினைத்து ராதிகாவுடன் சண்டை போட இனியா ராதிகாவின் வீட்டிற்கு கிளம்பி விட்டார். ஜெனி இனியாவை எவ்வளவு தடுத்தும் கூட இனியா கேட்பதாக இல்லை. இதற்கு பிறகு, இனியா ராதிகாவின் வீட்டிற்கு செல்வதை அறிந்து பாக்கியாவும் ராதிகாவின் வீட்டிற்கு செல்கிறார். அங்கு இனியா ராதிகாவை பார்த்து உங்களுக்கு தான் திருமணமாகி விட்டதல்லவா எதற்காக எங்களது குடும்பத்திற்குள் வந்தீர்கள்.
Exams Daily Mobile App Download
உங்களுக்கும் குழந்தை இருக்கிறது. எங்கள் அப்பாவிற்கும் பிள்ளைகள் இருக்கிறோம். உங்களால் தான் எங்களது குடும்பம் இந்த அளவிற்கு கஷ்டப்படுகிறது என இனியா வாய்க்கு வந்தபடி திட்டிவிடுகிறார். பின்னர், பொறுமையை அடக்க முடியாமல் இனியாவை ராதிகா கன்னத்தில் அறைந்துவிடுகிறார். இந்த நேரத்தில் சரியாக அங்கு வந்த பாக்கியா ராதிகாவுடன் சண்டை போடுகிறார். இதற்கு பிறகு பாக்கியாவின் முடிவு என்னவாக இருக்கும் என சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
பாக்யாவாக நடிப்பவர் மிகமிகமிக கேவலமாக நடிக்கிறாள். அவள் மூஞ்சியே சகிக்கவில்லை. கோபிதான் பாவம்….
பாக்கியாவுக்கு டயாலாக்கே இல்லையா?
எதிர்த்து பேசாமல் அப்படியே சிலை போல நிற்கவைத்தது இயக்குனரின் மடத்தனம். டாப் ரேங்கில் பாக்யலஷ்மி சீரியல் செல்வதால் எப்படிவென்னாலும் எடுக்கலாம்ன்னு இயக்குனர் முடிவு செய்துவிட்டார். ஆனால் அவர் ஒன்று மட்டும் மறக்க வேண்டால் இந்த சீரியல் இப்படியே போய்க்கொண்டிருந்தால் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு நடந்தது போல் அதாளபாதாளத்திற்கு இந்த சீரியல் செல்வது நிச்சயம்.