கோபியை வீட்டை விட்டு வெளியே அனுப்பிய ராதிகா, சந்தேகப்படும் பாக்கியா – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
கோபியை தான் ராதிகா திருமணம் செய்துகொள்ள போகிறார் என்பதை மூர்த்தி அறிந்துகொண்டு அனைத்து உண்மையையும் ராதிகாவிடம் கூறிவிடுகிறார். உடனே ராதிகா கோவப்பட்டு கோபியை வீட்டை விட்டு வெளியே துரத்தும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் கோபி ராதிகாவிடம் கையும் களவுமாக பிடிபடுவாரா என பரபரப்பாக ஓடி கொண்டிருக்கிறது. ராதிகாவையும் பாக்கியாவையும் ஒரே நேரத்தில் சமாளித்து பல மாதங்களாக கோபி ஏமாற்றி கொண்டிருந்தார். ஆனால், தற்போது கோபி மாட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது. ராமமூர்த்தி தாத்தாவின் பிறந்தநாள் முடிந்துவிட்டால் அனைத்து பிரச்சனையும் முடிந்துவிடும் என கோபி நினைத்து கொண்டிருந்தார். பிறந்தநாள் விழாவில் ராதிகாவின் கண்ணில் மாட்டிவிட கூடாது என்பதில் தெளிவாக இருந்த கோபி பிறந்தநாள் விழா முடிந்ததுமே ராதிகாவை பார்க்க சென்றிருக்கவே கூடாது. அது தான் கோபிக்கு தற்போது வினையாக வந்து நிற்கிறது.
Exams Daily Mobile App Download
பிறந்தநாள் விழா முடிந்ததும் கொஞ்ச நேரம் கூட பொறுத்துக்கொள்ள முடியாமல் ராதிகாவை பார்க்க கோபி ஓடுகிறார். மிக பெரிய கண்டத்தில் இருந்து தப்பித்துவிட்டோம் என கோபி சந்தோசமாக ராதிகாவுடன் பேசி கொண்டிருப்பதை மூர்த்தி பார்த்து சந்தேகப்படுகிறார். ராதிகாவை சந்திக்கவே மாட்டேன் என அடம்பிடித்து கொண்டிருந்த கோபி ஏன் தற்போது ராதிகாவுடன் இவ்வளவு நெருக்கமாக நின்று பேசி கொண்டிருக்கிறார் என நினைக்கிறார். சந்தேகத்தை தீர்த்துக்கொள்ள ராதிகாவின் வீட்டிற்கே சென்று வருங்கால கணவரின் புகைப்படத்தை காட்டுங்கள் என கேட்கிறார்.
பாக்கியா தான் கோபியின் மனைவி என்பதை ராதிகாவிடம் கூறிவிடும் மூர்த்தி – சீரியலில் புதிய திருப்பம்!
ராதிகாவும் கோபியின் புகைப்படத்தை எடுத்து மூர்த்தியிடம் நீட்ட மூர்த்தி அதிர்ச்சியடைகிறார். பின்பு, இது பற்றி கோபியிடமும் மூர்த்தி பேசுகிறார். கோபி அடங்காவதாக தெரியவில்லை. இதனால் ராதிகாவிடமே கோபியை பற்றிய அனைத்து உண்மையையும் மூர்த்தி கூறிவிடுகிறார். பின்பு, வழக்கம் போல கோபி ராதிகாவின் வீட்டிற்கு வருகிறார். உங்களை முழுசாக நம்பியதிற்கு நன்றாக செய்துவிட்டிர்கள் என ராதிகா கோபியுடன் சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியே விரட்டும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.