பிறந்தநாள் விழாவில் கோபியை பார்த்த ராதிகா – “பாக்கியலட்சுமி” சீரியலில் ரசிகர்கள் எதிர்பார்த்த திருப்பம்!
“பாக்கியலட்சுமி” சீரியலில் அனைவரும் எதிர்பார்த்த தருணம் வந்துள்ளது. நாளைய எபிசோடில் கோபி ராதிகாவிடம் வசமாக சிக்க இருக்கிறார். அதனால் கோபிக்கு பயங்கரமான பிரச்சனை வர இருக்கிறது. உண்மை எல்லாம் தெரிந்து ராதிகா கோபியை வெளுத்துக் கட்ட இருக்கிறார்
பாக்கியலட்சுமி:
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் தாத்தாவின் பிறந்தநாளுக்காக பாண்டியன் ஸ்டோர்ஸ் சொந்தங்கள் வர குடும்பமே சந்தோஷத்தில் இருக்கிறது. ஆனால் கோபிக்கு மட்டும் அது வருத்தத்தை தருகிறது. இதில் கோபி பேச்சை மீறி ராதிகாவை பாக்கியா அழைத்து இருப்பதால் கோபிக்கு பெரிய சிக்கல் வருகிறது. அதனால் கோபி இந்த பிறந்தநாள் விழாவை நிறுத்த நினைக்கிறார். ஆனால் அவருடைய திட்டம் கதிருக்கு தெரிந்துவிட அதனால் கோபியின் நடிப்பை கதிர், மூர்த்தி கண்டுபிடித்து தடுக்கின்றனர்.
Exams Daily Mobile App Download
அந்த திட்டமும் சொதப்பியதால் கோபி அடுத்து ராதிகாவை குறிவைக்கிறார். ராதிகாவிடம் தனக்கு நெஞ்சுவலி என சொல்லி பாக்கியா வீட்டு நிகழ்ச்சிக்கு செல்லாமல் தப்பித்துக் கொள்கிறார். ஆனால் ராதிகா போவதை அவரால் தடுக்க முடியவில்லை. அதனால் என்ன செய்வது என தெரியாமல் கோபி அலுவலகத்திற்கு கிளம்ப முயற்சி செய்கிறார். ஆனால் அனைவரும் சேர்ந்து கோபியை இருக்க வைக்கின்றனர். தனது அப்பாவிற்கு கேக் வெட்டி கோபி பிறந்தநாள் கொண்டாட அப்போது ராதிகா கார் வருகிறது.
ராதிகாவும் மயூராவும் கிப்ட் உடன் வீட்டிற்கு வருகின்றனர். அவர்கள் வருவதை பார்த்து கோபி பதட்டம் அடைகிறார். மேலும் அவர் வசமாக மாட்டிக் கொள்கிறார். இனி வரும் எபிசோடுகளில் ராதிகா கோபியை பார்த்து விட அவருக்கு எல்லா உண்மையும் தெரிய வருகிறது. அதனால் ராதிகா கோபியை அறைந்து விடுகிறார். கோபி, ராதிகாவிடம் என்ன சொல்லி சமாளிப்பார் என்பது எல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.