கோபியை மீண்டும் ஏற்றுக்கொள்ளும் ராதிகா, பரிதாப நிலையில் பாக்கியா – புதிய திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி!
ராதிகாவை பற்றி தவறாக பேசியதுமே கோபி ராஜேஷுடன் கோபி சண்டை போடுவதை பார்த்து விட்டு மறுபடியும் ராதிகா கோபியை ஏற்றுக்கொள்ளும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது மற்றும் இதற்குப்பிறகு தான் பாக்கியாவின் அருமையை கோபி உணர போகிறார்.
பாக்கியலட்சுமி:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் கோபியை ராதிகா மன்னித்து ஏற்றுக் கொள்வாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். கோபியை ராதிகா ஏற்றுக் கொண்டுவிட்டால் பாக்கியாவின் நிலைமை என்ன ஆகப்போகிறதோ எனவும் ரசிகர்கள் பதட்ட நிலையிலேயே உள்ளனர். பாக்கியா தான் கோபியின் மனைவி என்கிற உண்மை ராதிகாவிற்கு தெரியவந்ததுமே ராதிகா கோபியை விட்டு முழுவதுமாக விலக வேண்டுமென நினைக்கிறார்.
Exams Daily Mobile App Download
இதனால் கோபி வீட்டிற்கு வரும் போதெல்லாம் வீட்டை விட்டு வெளியே போக சொல்லி பயங்கரமாக திட்டி விடுகிறார். ஆனாலும், கோபி மறுபடியும் மறுபடியும் ராதிகாவை தேடி வருவதால் கடுப்பான ராதிகா கோபியை பிடித்து வெளியே தள்ளுகிறார். கோபியுடன் ராதிகா சண்டை போட்டுக் கொண்டிருப்பதை ராஜேஷ் பார்த்து மிகவும் சந்தோஷப்படுகிறார். ஒருநாள் உனக்காக என்னை கழுத்தை பிடித்து வீட்டை விட்டு வெளியே தள்ளினாள். இப்போது நான் சென்ற பிறகு வேறு எவனோ ஒருத்தனுக்காக உன்னையும் வீட்டைவிட்டு வெளியே அனுப்புகிறார் என ராதிகாவை பற்றிகேவலமாக ராஜேஷ் பேசுகிறார்.
வெண்பாவின் காதலை மறுத்த பாரதி, சந்தோஷத்தில் கண்ணம்மா? – ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அடுத்து வருபவை!
ராதிகாவை பற்றி தவறாக ராஜேஷ் கூறியதுமே கோபிக்கு மிகவும் கோபம் வந்து ராஜேஷை அடித்து விடுகிறார். ராதிகாவை பற்றி ராஜேஷ் தவறாக பேசியதும் கோபிக்கு வந்த அந்த கோபத்தை பார்த்து மறுபடியும் ராதிகா கோபியை ஏற்றுக் கொள்ள நினைக்கிறார். ராதிகாவுடன் கோபி சென்ற பிறகுதான் பாக்கியாவின் அருமையை முழுவதுமாக உணர்ந்து கொள்ளப் போகிறார். அதாவது கோபி எப்போதுமே வழக்கம்போல வீட்டிற்கு வந்ததும் கோபியை நலம் விசாரித்து காபி குடிப்பது வழக்கம். ஆனால், ராதிகா எதையுமே கண்டுகொள்ளாமல் கோபியை வேலை வாங்குவது போலவும், பாக்கியாவின் அருமையை கோபி இனிமேல் தான் உணர்வது போலவும் சீரியலை நகர்த்தவுள்ளனர்.