அரங்கேறும் ராதிகா, கோபியின் திருமண வைபோகம் – கலந்து கொள்ளும் பாக்கியா? ப்ரோமோ ரிலீஸ்!
இவ்வளவு நாட்கள் பாக்கியாவின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு ராதிகாவை காதலித்த கோபி இந்த வாரம் ராதிகாவை திருமணம் செய்ய இருக்கிறார். இந்த திருமணத்தில் பாக்கியாவும் கலந்துகொள்வது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. எப்போதுதான் பாக்கியா கோபியை பற்றிய அனைத்து உண்மைகளையும் தெரிந்துகொள்ள போகிறாரோ என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். பாக்கியாவும் ராதிகாவும் நெருங்கிய நண்பர்களாக இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் தன்னைப் பற்றிய உண்மைகள் அனைத்தும் இருவருக்கும் தெரிய வாய்ப்பிருக்கிறது என கோபி பயந்தபடி இருக்கிறார்.
Exams Daily Mobile App Download
இதனால் உடனே இருவரையும் பிரிக்க வேண்டும் என பிளான் பண்ணுகிறார். இதனால் பாக்கியா சமைத்த சாப்பாட்டில் ஏதோ ஒன்றை கோபி கலந்து விடுகிறார். பின்பு, பாக்கியா சமைத்ததை சாப்பிட்ட அனைத்து ஆதரவற்ற குழந்தைகளும் மயங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் பாக்கியாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ராதிகாவையும் விசாரிக்க வேண்டும் என்பதற்காக ராதிகாவையும் காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்து செல்கின்றனர். பின்பும் பாக்கியாவை காப்பாற்ற குடும்பத்தில் உள்ள அனைவரும் கோபிக்கு கால் செய்கின்றனர்.
Reliance Jio பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் – சூப்பர் ரீசார்ஜ் திட்டங்கள்! முழு விவரம் இதோ!
யாருடைய காலையும் கோபி அட்டென்ட் செய்யாமல் ராதிகாவை மட்டும் காப்பாற்றி கூட்டி வருகிறார். காவல் நிலையத்தில் இருந்த போது ராதிகா பாக்கியா மீது பயங்கர கோபத்தில் இருக்கிறார். அதாவது பாக்கியாவை நம்பியதற்கு இவர் தன்னை காவல் நிலையம் வரைக்கும் அழைத்து வந்து விட்டாரே என கோபமாக இருக்கிறார். பின்பு நாம் தான் தேவையில்லாமல் இப்படி கோபத்தை காட்டி விட்டோம் என மன்னிப்பு கேட்கிறார். பின்பு இவ்வளவு கஷ்டப்பட்டும் இந்த வாய்ப்பு வீணாகி விட்டதே என மிகவும் கவலையில் இருக்கிறார். இந்நிலையில் இந்த வாரம் ராதிகா மற்றும் கோபியின் திருமண வைபோகம் நடைபெற இருக்கிறது. திருமணத்திற்கு ராதிகா பாக்கியாவையும் வரச்சொல்லி அழைப்பு விடுப்பது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது.