கோபியை ஏற்றுக்கொள்ள வற்புறுத்தும் ராதிகாவின் அம்மா – புதிய திருப்பங்களுடன் ‘பாக்கியலட்சுமி’ சீரியல்!
பாக்கியா தான் கோபியின் மனைவி என்கிற உண்மை ராதிகாவிற்கு தெரிய வந்ததுமே கோபியை வெறுக்க ஆரம்பித்து விட்டார். தற்போது கோபியை ஏற்றுக்கொள்ளும்படி ராதிகாவின் அம்மா ராதிகாவை வற்புறுத்தும் படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் கோபியை ராதிகா மன்னித்து மீண்டும் ஏற்று கொள்வாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். அதாவது குடிபோதையில் பாக்கியா தான் என்னுடைய மனைவி என்கிற அனைத்து உண்மையையும் கோபி ராதிகாவிடம் கூறிவிட்டார். இத்தனை நாட்களாக தனது நெருங்கிய தோழியின் கணவனை தான் காதலித்துக் கொண்டிருந்தோமா என தன் மீதே கோபப்பட்டு கோபியை வெறுக்க ஆரம்பித்து விட்டார். ராதிகா என்னதான் கோபியை விட்டு விலக நினைத்தாலும் ராதிகாவை கோபி விடுவதாக இல்லை.
Exams Daily Mobile App Download
அவ்வப்போது ராதிகாவின் வீட்டிற்கு சென்று ராதிகாவிடம் எதற்காக பாக்கியா தான் என் மனைவி என்பதை மறைத்தேன் என்பதை விளக்கிக் கொண்டிருக்கிறார். எனக்கு பாக்கியாவை சுத்தமாக பிடிக்கவே இல்லை. உன்னையும் மயூவையும் நன்றாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று தான் நினைக்கிறேன். நீ ஏன் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறாய் என ராதிகாவிடம் காலில் விழுகாத குறையாக கெஞ்சிக் கொண்டிருக்கிறார். எவ்வளவு சொன்னாலும் கோபி திரும்பத் திரும்ப வீட்டிற்கு வருகிறார் என கோவப்பட்டு ராதிகா கோபியை பிடித்து வீட்டிற்கு வெளியே தள்ளுகிறார்.
இரண்டாவது திருமணத்திற்கு தயாராகும் விக்னேஷ் சிவன்? இது தான் காரணம்! ரசிகர்கள் ஷாக்!
கோபியை ராதிகா வீட்டை விட்டு விரட்டுவதை பார்த்துவிட்டு ராஜேஷ் மிகவும் சந்தோஷப்படுகிறார். கோபி இருக்கும்போது என்னை இப்படித்தானே வீட்டை விட்டு விரட்டினாய். தற்போது கோபியையும் விரட்டுகிறாய். தற்போது யாருடன் இருக்க போகிறாய் என கண்டபடி ராஜேஷ் ராதிகாவை திட்டிவிடுகிறார். ராதிகாவை ராஜேஷ் திட்டியதை கேட்டு பொறுக்கமுடியாமல் கோபி ராஜேஷை நன்றாக அடித்து விடுகிறார். ஒரு பெண்ணிற்காக இரண்டு பேர் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என கூட்டத்தில் வேடிக்கை பார்ப்பவர்கள் அனைவரும் திட்டுகின்றனர். இந்நிலையில், கோபி தான் உனக்கு சரியான புருஷன். நீ அவரை ஏற்றுக்கொள் என ராதிகாவின் அம்மா ராதிகாவை வற்புறுத்தும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.