பாக்கியாவுக்காக கோபியை விட்டு விலக முடிவு செய்யும் ராதிகா – சீரியலில் அடுத்த திருப்பம்!

0
பாக்கியாவுக்காக கோபியை விட்டு விலக முடிவு செய்யும் ராதிகா - சீரியலில் அடுத்த திருப்பம்!
பாக்கியாவுக்காக கோபியை விட்டு விலக முடிவு செய்யும் ராதிகா - சீரியலில் அடுத்த திருப்பம்!
பாக்கியாவுக்காக கோபியை விட்டு விலக முடிவு செய்யும் ராதிகா – சீரியலில் அடுத்த திருப்பம்!

விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் கோபி பற்றிய அனைத்து உண்மைகளையும் தெரிந்து கொண்ட ராதிகா இப்போது பாக்கியாவுக்காக அவரை விட்டு விலக முடிவு செய்வது போல ப்ரோமோ ஒன்று வெளியாகி எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

பாக்கியலட்சுமி சீரியல்:

கடந்த சில எபிசோடுகளாக எதிர்பாராத கதை திருப்பங்களுடன் பரபரப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியல் ‘பாக்கியலட்சுமி’. இந்த சீரியலில் பாக்கியாவுக்கு தெரியாமல் காதலியுடன் பழகி கொண்டிருக்கும் கோபி எப்போது அவரது குடும்பத்தாரிடம் மாட்டுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். இதற்கான சந்தர்ப்பங்கள் அமைந்த போதிலும் கோபி ஒவ்வொரு முறையும் சிறப்பாக காய் நகர்த்தி எஸ்கேப் ஆகி விடுவார். இப்படியே கிட்டத்தட்ட 300 எபிசோடுகளுக்கும் மேலாக கடந்துள்ள நிலையில் இந்த வார எபிசோடில் தான் கோபி தன் வாயால் ராதிகாவிடம் மாட்டிக் கொண்டார்.

Exams Daily Mobile App Download

அதாவது, கடந்த வாரம் ஒளிபரப்பான மெகா சங்கம எபிசோடுகளில் மூர்த்தி மற்றும் தனம் இருவரும் பற்ற வைத்த நெருப்பு இப்போது ராதிகாவுடன் ஆன கோபியின் காதலுக்கு முடிவு கட்டியுள்ளது. இப்போது, கோபி குடித்து விட்டு பாக்கியா பற்றிய உண்மைகளை ராதிகாவிடம் உளறி வைக்க அவர் கோபியை வீட்டை விட்டு துரத்தி விடுகிறார். இன்றைய எபிசோடில், நடந்ததை எல்லாம் மறந்த கோபி ராதிகாவை சமாதானப்படுத்த அவர் வீட்டுக்கு செல்கிறார். அப்போது, எந்த முகத்துடன் இங்கு வந்திருக்கிறீர்கள். நீங்கள் டீச்சரின் கணவர் என்பதை மறைத்து என்னிடம் பழகி இருக்கிறீர்கள். இது உங்களுக்கு அசிங்கமாக இல்லை என்று காட்டமாக கேட்கிறார் ராதிகா.

கண்ணனின் வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்தினர் – வைரலாகும் வீடியோ!

இதற்கு அடுத்து ராதிகா என்ன முடிவு எடுப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வரும் நிலையில் பாக்கியாவுக்காக அவர் கோபியை விட்டு விலக முடிவு செய்வது போல ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதாவது, ராதிகாவை சந்திக்க வரும் பாக்கியாவிடம் என்னை திருமணம் செய்து கொள்வதாக சொன்னவர் நல்லவர் இல்லை என்று அவர் கூறுகிறார். ஆனால், உண்மையை சொன்னதால் அவர் நல்லவராக தான் இருப்பார் என்று பாக்கியா அப்பாவித்தனமாக கூறுகிறார். இருப்பினும் பாக்கியாவுக்காக கோபியை விட்டு விலக ராதிகா முடிவு செய்வது போல அந்த ப்ரோமோ வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!