கோபியை பற்றிய உண்மையை தெரிந்து கொள்ளும் ராதிகா – ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் புதிய திருப்பம்!
ராதிகாவுக்கு உண்மைகள் தெரிந்துவிட கூடாது என கோபி சதித்திட்டம் தீட்டி கொண்டிருந்தாலும் ராதிகா தற்போது கோபியை பற்றிய அனைத்து உண்மைகளையும் தெரிந்து கொள்வது போன்ற ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
பாக்கியலட்சுமி:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. பாக்கியா தான் கோபியின் மனைவி என்பதை ராதிகா எப்போது தான் அறிந்துகொள்ள போகிறாரோ என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். பாக்கியாவும் ராதிகாவும் நெருங்கிய நண்பர்களாக இருப்பதால் எப்படியும் தன்னைப்பற்றிய உண்மைகள் இருவருக்கும் தெரிய வந்து விடுமோ என பயந்து இருவரையும் பிரிக்க திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்.
Exams Daily Mobile App Download
தற்போது கூட பாக்கியா சமைத்து கொடுத்த சாப்பாட்டில் நஞ்சை கலந்துவைத்து பாக்கியாவை ஜெயிலுக்கு அனுப்பினார். அப்போது பாக்கியாவை நம்பியதிற்கு இவர் நம்மை ஜெயிலுக்கு அனுப்பிவிட்டார் என பாக்கியா மீது ராதிகா கொலை வெறியில் இருந்தார். பின்பு, பாக்கியா மீது எந்த தவறும் இல்லை என்பதை புரிந்துகொண்டு பாக்கியாவுடன் பழையபடி பழக ஆரம்பித்துவிட்டார். இதற்கு பிறகு பாக்கியா ராதிகாவிடம் எனது கணவர் பிசினஸ் செய்ய வேண்டாம் என கூறிவிட்டார் என கூறுகிறார். உடனே ராதிகா கோபியிடம் சென்று பாக்கியாவின் கணவர் பிசினஸ் தொடங்க வேண்டாம் எனக் கூறிவிட்டாராம்.
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் இருந்து விலகிய நடிகை ரூபா ஸ்ரீ – இனி சௌந்தர்யாவாக பிரபல நடிகை!
நாம் அவரிடம் சென்று பேசுவோம் என கூறுகிறார். உடனே கோபி பாக்கியா பிசினஸ் தொடங்க வேண்டும் நான் அவருக்கு ஹெல்ப் செய்கிறேன் எனக்கூறி பாக்கியாவிடம் சென்று நான் நன்றாக யோசித்துப் பார்த்தேன். நீ பிசினஸ் செய் என்று கூறுகிறார். உடனே பாக்கியாவும் ராதிகாவிடம் எனது கணவர் பிசினஸ் செய்ய ஒப்பு கொண்டார் எனக்கூறுகிறார். பின்பு, ராதிகாவிடம் பாக்கியா கோபியின் பெயரை பயன்படுத்துவது போன்றும், கோபி தான் பாக்கியாவின் கணவர் இவ்வளவு நாள் கோபி பொய் சொல்லி ஏமாற்றியிருக்கிறார் என நினைக்கும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.