உலக சாதனை செய்த பாக்கியா, கோபி டிவியில் வருவதை பார்த்து உண்மையை தெரிந்த ராதிகா – “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்து வருபவை!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் பாக்கியா உலக சாதனை செய்ய போறேன் என சொல,அதை கேட்டு கோபி மட்டம்தட்டி பேச ஆனாலும் அவர் சாதனையை செய்து முடிக்கிறார். இந்நிலையில் பாக்கியாவுடன் கோபி டிவியில் வருவதை ராதிகா பார்த்துவிடுகிறார்.
பாக்கியலட்சுமி;
பாக்கியலட்சுமி சீரியலில் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் கதை சென்று கொண்டிருக்கிறது. பாக்கியா தொழிலில் பெரிய இழப்பை சந்திக்க அதனால் வாடிக்கையாளர்களின் மத்தியில் நல்ல பெயரை இழந்துவிடுகிறார். இந்நிலையில் பாக்கியாவை 1 மணி நேரத்தில் 100 உணவுகளை சமைத்து உலக சாதனை செய்ய வேண்டும் என சொல்கிறார். பாக்கியா முதலில் வேண்டாம் என நினைக்க ஆனால் எழில் மற்றும் குடும்பத்தில் அனைவரும் பேசி பாக்கியாவை சம்மதிக்க வைக்கின்றனர்.
Exams Daily Mobile App Download
இந்த விஷயம் ராதிகாவுக்கு தெரிந்து அவர் மிகவும் சந்தோசப்பட்டு கோபியிடம் சொல்கிறார். ஆனால் கோபி பாக்கியா தேவை இல்லாத வேலைகளை செய்வதை பார்த்து கோபப்படுகிறார். வீட்டிற்கு வந்து உலக சாதனை என்பது சாதாரண விஷயம் இல்லை என கோபி சொல்கிறார். உன்னால் கண்டிப்பாக முடியாது என கோவமாக பேச பாக்கியாவிற்கு இருந்த நம்பிக்கை போகிறது. ஆனால் எழில் உன்னால் முடியும் என சொல்ல பாக்கியா செய்யலாம் என முடிவு செய்கிறார்.
மறுநாள் பாக்கியா பல தடைகளை தாண்டி திட்டமிட்டு இந்த சாதனையை செய்கிறார். அதை நினைத்து அனைவரும் சந்தோசப்படுகின்றனர். பின் பல செய்தி நிறுவனங்களில் இருந்து பாக்கியாவை பேட்டி எடுக்க வருகின்றனர். அப்போது பாக்கியாவின் பேட்டி எல்லா சேனல்களிலும் வருகிறது. கோபியும் அதில் பாக்கியாவுடன் இருக்க ராதிகா அதை டிவியில் பார்த்துவிடுகிறார். பின் கோபி ராதிகா வீட்டிற்கு வர டீச்சருடன் உங்களை நான் டிவியில் பார்த்தேன் என ராதிகா கோவமாக கேட்கிறார். இதெல்லாம் இனி வர போகும் எபிசோடுகளில் வர இருக்கிறது.